தமிழகத்தின் ஒரு சிறிய கிராமம் அது. ஆனால் வளம் கொழிக்கும் பூமி ஆகும்.செம்மண் ரோடுகள்,வளைந்து-நெளிந்து செல்லும் வண்டித்தடங்கள்.மின்சார வசதி கிடையாது.சிம்னி,அரிக்கன் விளக்குகள்.அந்த கிராமத்தில்ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பினர்,அதிக எண்ணிக்கையிலும் விவசாய வேலைகள் செய்வதற்கு என்றும் ,கிராமத்திற்கு என்று பல்வேறு தொழில் செய்யக்கூடியவர்களும்வசித்து வந்தனர்.ஊரில் கட்டுப்பாடுகள் அதிகம் காணப்படும்.

ஊரில் அடைக்கலம்,சிதம்பரம்,சோமசுந்தரம்உள்பட பெரியமனிதர்கள் உண்டு. கிராமத்தின் ஊர் தொடக்கத்தில் குடி தண்ணீர் ஊரணியும்,கிராமத்திற்கு என்றுகண்மாயும் உண்டு.

கிராமத்தில் ஒரு கோவிலும் அதனை ஒட்டிய சவுக்கையும் அருகில் திறந்த வெளியும்உண்டு.வீடுகள் தோறும் பசுமாடும்,உழவுக்கு பயன்படும் காளைமாடுகளும்,விவசாய பணிக்கு மொட்டைமாட்டு வண்டிகளும், பயணத்திற்கு என்று கூடு வண்டிகளும் உண்டு.விவசாய காலங்களில்வீதிகள் தோறும் நெல் மணிகள் சிதறிக்கிடப்பதை காணலாம்.முக்கிய பிரச்சினைகள் ஊர்சவுக்கையில் கூடி அனைவரும் பேசி முடிவு செய்வார்கள்.

யார் மீதாவதுகுற்றம் சுமத்துபவர்கள் முதலில் வெற்றிலை வைத்து இன்னார் மீது இன்ன குற்றம் சுமத்துவதாகதெரிவிப்பார்கள்.ஊர் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து குற்றம் சுமத்தப்பட்டவரை அழைத்து விசாரணைநடத்தி ஊர் தண்டனை அளிப்பார்கள்.



ஊர் தண்டனைக்கு அனைவரும் கட்டுப்பட்டு தான் நடப்பார்கள்.ஊரில் உள்ள பெரியவர்களில்சிலர் அந்த கால அரிச்சுவடி பள்ளியில் படித்தவர்கள்.ஆனால் விஷயம் தெரிந்தவர்கள்.

வீடுகளில் உள்ள காளைமாடுகள் தொழுவத்தில் வீட்டு சுவரில் இருந்து இரண்டடி முன்புறம்நீளவடிவிலான பாறைபலகைகள் அமைத்து இருப்பார்கள்.பாறைபலகைகளில் துளையிட்டுஇரும்பு சங்கிலியால் மாடு கழுத்தில் இருந்து பிணைத்து இருப்பார்கள்.சுவருக்கும் கற்பலகைக்கும் இடையில் உள்ள இடத்தில் மாட்டு தீவனமான வைக்கோல்போடப்பட்டு இருக்கும்.

கிராமங்களில் அதிக அளவு வீடுகளில் விளைபயிர்களான நெல்,கடலை,போன்றவைத்தான் சாக்குகளில் கட்டி மூட்டையாக அடுக்கி வைத்து இருப்பார்கள்.அந்த காலகட்டங்களில் விலை உயர்ந்த பொருளாக மதிக்கப்படுபவை உயர்ந்த ரக உழவுமாடுகள் தான்.கிராமங்கள் அடுத்து அடுத்து இருக்கும் .

ஒருகிராமத்தின் கடைசி வீட்டில் இருந்து சிறிது தூரம்சென்றால்அடுத்த ஊரின் தொடக்கம் வந்து விடும்.அப்போது கிராமங்களில் திருடு என்பது மாட்டை களவாடிச் செல்வதுதான்.ஒரு சில கிராமங்களில் உளவு சொல்வதற்கும்,திருடிச் செல்வதற்கும் ஆட்கள் உண்டு. 

சிறு வியாபாரிகள் போல் ஊருக்குள்சென்று யார் வீட்டில் உயர்ந்த ரக மாடுகள் உள்ளது என்று தெரிவிப்பார்கள்.அப்படித்தான் அந்த கிராமத்திலும் ஒருசமயம் ஒரு குறிபிட்ட வீட்டில் இருந்து உழவு மாடுகள்இரண்டை பிடித்துக்கொண்டு சென்று விட்டார்கள்.

பொதுவாக ஒரு பத்து பதினைந்துகிராமத்திற்குள் உள்ளடங்கி இவை நடக்கும். இந்த கிராமங்களில் திருடப்படும் மாடுகளைஎங்கும் விற்க முடியாது.மாட்டு தரகர்கள் என்று குறிப்பிட்ட சிலர் இருப்பார்கள். அவர்களை பர்ர்த்து பேசி ஒரு குறிப்பிட்டதொகையை கொடுத்து விட்டால் வீட்டு உரிமையாளருக்கு மாடு வந்து சேர்ந்து விடும்.இவை அவ்வப்போது நடப்பது வழக்கம்.ஆனால் திருடுபோனதும் அந்த கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி இதற்கு முடிவு கட்டவேண்டும் என்று யோசித்தார்கள்.

மாடு திருடிச் சென்றவர்கள் ஓரிரு நாட்களில் மாட்டை கேட்டு தூது வரவில்லை என்றால்,திருடர்கள்மீண்டும் தங்கள் கைவரிசையை அந்த கிராமத்தில் காட்டவருவது வழக்கம்.எனவே,மீண்டும் மாட்டுதிருடர்கள் வந்தால் கையும் களவுமாக பிடிக்க கிராமத்தினர் முடிவு செய்தனர்.அதன்படி ரகசியமாகநான்கு திசைகளிலும் இரவில் காவல் காப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த ரகசிய முறைப்படி இளஞர்கள் காவல் காத்தனர்.இரண்டு நாள் ஒன்றும் நடக்கவில்லை.மூன்றாம்நாள் நள்ளிரவு தாண்டிய நேரம் இரண்டு பேர் ஊருக்குள் நுழைந்தனர்.தயாராக காத்து இருந்த இளஞர்கள்அவர்களை கையும் களவுமாக பிடிக்க முயன்றதில் ஒருவன் தப்பிவிட ஒருவனை பிடித்து சவுக்கைக்குகொண்டுவந்து கோவில் முன்பு இருந்த விளக்கு தூணில் கட்டி வைத்தனர்.மறுநாள் நடந்த விசாரணையில் அவன் மாடு திருடிச்சென்று ,எங்கு வைத்து உள்ளோம் என்பதுவரை சொல்லி விட்டான்.இதற்கு இடையில் இடைத்தரகர்கள் என்று சிலர் கிராமத்திற்குவந்துவிட்டனர்.

கிராம பஞ்சாயத்தில் பேசியதில் முதலில் திருடிச் சென்ற மாட்டை திருப்பிக் கொண்டு வந்துகொடுப்பது என்றும் பின்னர் தண்டனை பற்றி பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.அதேபோல் மாடுகள் கிராமத்திற்கு வந்து சேர்ந்தன.இதற்கு இடையில் கிராமமக்கள் ஒன்று கூடி திருடனுக்கு சாணிபால் அபிஷேகம்,தர்ம அடி என்றுகொடுத்து விட்டார்கள்.கிராம மக்கள் ஒன்று சேர்ந்தால் அடித்தே கொன்று விடுவார்கள்.

போலிஸ் நிலையங்கள் பல மைல்தூராம் இருப்பதால் தெரிவதில்லை.தெரிந்து வந்தாலும் கிராமத்தினர் சொல்லும் தகவலை வைத்து விசாரணையை முடித்து விடுவார்கள்.பொதுவாக கிராமங்களில் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.அதனால் அடைக்கலம்,சிதம்பரம் சோமசுந்தரம் தலைமையில் திருடனை மன்னித்து விட முடிவுசெய்தனர்.

மறுநாள் சபை கூடியது.அனைவரும் வந்தனர்.திருடனுக்கு ஆதரவாளர்களும் வந்தனர்.திருடனை விட்டு விடுவது,இனி இந்த கிராமத்தில் எந்த காலத்திலும் எந்த பொருளும்திருடுவதில்லை.அப்படி ஏதாவது திருடு போனால் அதற்கு அவர்களே பொறுப்பேற்பதுஎன்ற ஒப்பந்தத்தில்,கோவில் முன் சத்தியம் செய்து கொடுத்த பின் திருடன் விடுவிக்கப்பட்டான்.அதை தொடர்ந்து அந்த கிராமத்தில் மாடு,மற்றும் பொருள் திருட்டு ,போன்றவைகள் முற்றிலும் தடுக்கப்பட்டது.

கிராமத்தினரின் சமயோசித புத்தியால் திருடனை மன்னித்து விட்டதுடன்கிராம மக்களையும் பழி,பாவத்தில் இருந்தும் காப்பாற்றி விட்டனர்.  

Share.

Leave A Reply