கோவைக்காய்,  பழம்

 சாதாரணமாக வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய கொடி வகைகள் தான் இந்த கோவை.   இது மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.  மேலும் வழவழப்புத் தன்மை உடையது.  இந்த குளிர்ச்சி மற்றும் வழவழப்புத் தன்மை நமக்குப் பல நன்மைகள் புரிகிறது.

இந்தக் கோவை இலை மற்றும் வேப்ப இலைகளை சம அளவு எடுத்துக்கொண்டு அரைத்து  வெயில் காலங்களில் முகத்தில் தடவி கழுவி வந்தால் முகப்பருக்கள் வேர்க்குரு போன்ற பிரச்சினைகள் எதுவும் வராது. 

வெகுநாட்களாக ஆறாத புண்கள் நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் நிலையில்  இந்த கோவைஇலையுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து அதில் தடவிவர எத்தகைய புண்ணாக  இருந்தாலும் அதை ஆற்றிவிடும்.

சிலருக்கு உஷ்ணம் காரணமாக நாக்கில் புண் சிறு கொப்பளங்கள் ஏற்படுவது உண்டு அவர்கள் இந்த கோவை இலையை வெறும் வாயில் போட்டு மென்றாலே போதும். அதை ஆற்றக் கூடிய தன்மை உள்ளது.

இந்த கோவை இலையை எடுத்து அதை தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி கொதிக்கவைத்து குடித்துவர  ரத்தத்தை சுத்திகரிக்கும்.  மேலும் எத்தகைய கொடிய காய்ச்சலும் வராத அளவு நமது உடலை சீராக்கும்.  சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாக உள்ளது.  இந்த கசாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர மூல நோய் உள்ளவர்களுக்கு படிப்படியாக நோய் குறையும் தன்மை உள்ளது.

இந்த இலையை பச்சையாக தினமும் எடுத்துக் கொண்டால்  சர்க்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வந்து விடும். கோவை காயுடன் இஞ்சி,  கருவேப்பிலை,  உப்பு , மிளகு சேர்த்து அரைத்து அதை வடிகட்டி குடித்து வந்தால் அது  இன்சுலின் சுரப்பதை அதிகப்படுத்தும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து சீராக்கி கொடுக்கும்.   இந்த கலவையை மோருடன் கலந்து உட்கொள்ளலாம்.

இந்த கோவைஇலை கோவைக் காய், பழம்  இவைகள் அனைத்தும் நெகட்டிவ் கலோரிகளை கொண்டவை எனவே இதை உண்ணும் பொழுது நம் உடலுக்குப் புதிதாக கலோரி உருவாகாமல் நம் உடலில் உள்ள கலோரியை கரைத்து ஜீரணம் ஆகிறது.  எனவே நமது உடலின் கலோரியை எரிக்க உதவும் மிகவும் பயனுள்ளதாகவும் சர்க்கரை நோய் கட்டுப்படும் உடல் பருமனை குறைக்கவும் உடலை ஆரோக்கியமாக வைக்க பயன்படுகிறது.

நாக்கின்  ருசி தன்மை குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர நாவின் நரம்புகள் அதிகப்படியாக வேலை செய்து நல்ல ருசி தன்மையை பெரும் நம் தெருவோரங்களில் சாதாரணமாக வளரும் இந்த கோவை கொடியின் பயனை நாமும் உணர்ந்து பயன்படுத்தி பயன் பெறுவோம்.

Share.

Leave A Reply