மலைக்கோயில் மர்மம்  53

முன்கதை சுருக்கம்

கோடை விடுமுறைக்கு கிராமத்திற்கு வரும் இராஜா , ரகு  ஆகியோர் அங்குள்ள  ஒருமலை பற்றி அறிந்து வியப்புற்று அந்த மலை மீது ஏறிப்பார்க்க செல்கிறார்கள். மலை மீது இருக்கும் ஒரு கோவிலின் உள் பகுதியில் இருக்கும் சுவாமி சிலையின் பின்புறம் சில வினோதமான  படங்கள் வரையப்பட்டிருக்கின்றன . அதைப்பற்றி  அறிந்து கொள்வதற்காக அவற்றைப் பார்த்து இராஜா வரைந்து எடுத்துக்கொண்டு  மலை மீது ஏறிய நண்பர்களுடன் அனைவரும் கீழே இறங்கி வந்து விடுகிறார்கள். படத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தை அடைய மறுநாள் செல்ல முடிவு செய்கிறார்கள் .

மலை மீது ஏறிச்சென்ற  மாரியப்பன், அமாவாசை, மற்றும் கிராமத்து நண்பர்கள்  அனைவரும் வீட்டிற்கு திரும்புகின்றனர். கிராமத்து சிறுவர்களுக்கு இதுபற்றி ஒன்றும் புரியவில்லை . மாரியப்பன் உடல் அளவில்  பலசாலிதான் .ஆனால் அவருக்கும் இந்த படங்கள்  பற்றி ஒன்றும் விளங்கவில்லை .

ஆனால் ஆடு மேய்க்கும் அமாவாசைக்கு மட்டும் இங்கு  எதோ புதையல் இருக்கலாம் என்ற எண்ணம் இப்போது உள் மனதில் தோன்ற ஆரம்பித்தது. இருந்தபோதிலும்  நம்மால் இந்த கிராம முக்கிய தலைக்கட்டுகளை எதிர்த்துப் பேசவோ ,எதுவும் செய்யவோ முடியாது என்பதால் பேசாமல் இருந்து விடுவது நல்லது என்று நினைக்கிறார்.

  • ஆனால் கிராமத்து தலைவரின் பேரன் இராஜா சொன்னால் இங்கு எதுவும் நடக்கும். பேரனின் சொல்லை ஊர்ப்பெரியவர்  கேட்டுத்தான் ஆவார் என்ற நம்பிக்கை இப்போது வந்து விட்டது.இதன் மூலம் இந்த கிராமத்துக்கு ஏதாவது நல்ல காலம் பிறந்தால் சரிதான் என்று நினைத்துக் கொண்டார்.

ஆனால் நாளை காலை யார் யார் வருவார்கள்   என்று தெரியாது. நாம் வழிமட்டும் காட்டுவோம்.என்று நினைத்துக் கொண்டார். மாரியப்பனும்  இந்த விசயத்தை  ஐயாவிடம் எப்படிச் சொல்வது  என்று யோசித்துக் கொண்டு இருந்தார். இதைச்சொன்னால்  எதுவும் தடை சொல்வதுடன் நம்மையும் ‘ஏண்டா சின்னப்பசங்கள் சொன்னார்கள் என்று நீ அங்கெல்லாம் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனாயா’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார் என்ற சங்கடமும் மாரியப்பனுக்கு இருந்தது .

‘சரி என்ன கேட்டாலும் பார்த்துக் கொள்ளலாம்’ .என்று யோசனை செய்து கொண்டார். இராஜாவுடன் சென்ற சிறுவர்கள் எல்லோரும் ஒவ்வொன்றாக  மனதில் நினைத்துக் கொண்டார்கள்.

மலை ஏறிச் சென்ற   சிறுவர்கள் அனைவரும் பொழுது சாயும் நேரத்தில் கிராமத்திற்கு திரும்பினார்கள்..அதற்குள் அங்குள்ள  சிலர் இவர்கள் எங்கே சென்றார்கள் இவ்வளவு தாமதமாக வருகிறார்களே  என்று அங்கலாய்த்துக் கொண்டு சிறுவர்களைக் கடிந்து கொண்டார்கள். ஊர்த்தலைவர் பேரனுடன் சென்றதால் அதை அவ்வளவு பெரிது படுத்தாமல் மவுனமாகிவிட்டார்கள் .

முத்துச்சாமியும்,  ”மாரியப்பனிடம் மலை மீது ஏறி என்ன பார்த்தீர்கள் ? இவ்வளவு நேரமாகி விட்டதே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தார்”. அவர் கேட்பதற்கு எல்லாம் மாரியப்பன்  பட்டும்படாமலும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தார்.

ஆனால் இராஜா ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் சென்று விட்டான். தாத்தாவின் கேள்விக்கணைகள்  முடிந்த பின்னர் வெளியே வந்த இராஜா ,”தாத்தா நாங்கள் மலை மீது ஏறிப்ப்பார்த்துவிட்டுதான் வந்தோம். .அங்கே சொல்ல முடியாத அளவிற்கு பல அதிசயங்கள் உள்ளன ,.தாத்தா கேட்டால் சொல்கிறேன்”  என்றான்.இராஜா.

‘சரி நான் கேட்கிறேன் . நீ என்ன சொல்ல வருகிறாய்’ என்று கேட்டார். முத்துச்சாமி.. ஒன்றுமில்லை  நாங்கள் நாளைக்கும்  மலைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் மறுக்காமல் அனுமதி கொடுங்கள். என்றான் ராஜா.

”அப்படி அங்கு என்ன இருக்கிறது .போய்ப் பார்க்க” என்றார் முத்துச்சாமி. நாளை ஒரு நாள் நாங்கள் சென்று வர அனுமதி கொடுங்கள்.  அதே போல் மாரியப்பன் , மண்ணாங்கட்டி  ஆகியோரையும் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்றான் இராஜா. ‘

”சரி கூட்டிக்கொண்டு போகலாம். .அங்கே என்னவோ ஓவியங்கள்  எல்லாம் இருந்ததாகவும், அவற்றைப் பார்த்து வந்ததாகவும் மாரியப்பன் கூறினானே ? அது என்ன ஓவியம்” .என்று கேட்டார்.. தாத்தாவுக்கு ஓவியம் பற்றி  தெரிந்து இருக்கிறது, அதையே சாக்காக வைத்து நாளையும் சென்று வந்து விடலாம். அத்துடன் இந்த மலைக் கோவிலில் உள்ள ரகசியமும் விடுபட்டு விடும் என்று இராஜா மனதில் நினைத்துக் கொண்டான் .

”ஆமாம் தாத்தா அங்கே சில சிற்ப ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றை நான்  கொண்டு சென்ற நோட்டில் வரைந்து எடுத்து வந்திருக்கிறேன். அவற்றை இன்னும் நல்ல முறையில் வரைய வேண்டும் அதற்காகத்தான் நாளையும் செல்ல வேண்டும் என்று சொல்கிறேன்”. என்று கூறினான் .

”சரி அந்த ஓவியங்களை காட்டு பார்க்கலாம்” என்று முத்துச்சாமி கேட்டார். உடனே இராஜாவும் தான் வரைந்து கொண்டு வந்திருந்த ஓவியங்களைக் காண்பித்தான்.ஓவியங்களைப் பார்த்து  வியந்து போன முத்துச்சாமிக்கு  ஏற்கனவே அந்த ஊரில் காது வழியாக சொல்லப்பட்டு வந்த சில சம்பவங்கள் நினைவிற்கு வந்தன.

‘இராஜா இந்த ஓவியங்கள் எங்கு வரையப்பட்டிருந்தன. என்று கேட்டார். தாத்தா மலை உச்சியில் ஒரு சிறிய  கோவில் உள்ளது .அந்த இடத்துக்கு எங்களை அங்குள்ள ஆடு மேய்க்கும் அமாவாசை தாத்தா கூட்டிச் சென்றார்….’

‘கோவிலின் உள் பகுதியில் ஒரு சாமி சிலை பின்புறம் இந்த ஓவியங்கள். வரையப்பட்டிருந்தன .அதைத்தான் நான் வரைந்து கொண்டு வந்தேன்’ என்றான் இராஜா

அந்தப் பெரிய கோட்டைமலையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பகுதியை ஆண்ட அரசர்கள் நகரத்தில் இருந்து ஒதுக்குப்புறமாக இருந்த இந்த மலையில் பாதுகாப்பாக  பொருட்கள் , ஆபரணங்கள், ஆயுதங்கள்  பதுக்கி வைத்திருந்ததாகவும், அவற்றை சில பேய்கள் வழிவழியாக காத்து வருவதாகவும், பேசிக் கொண்டவை நினைவுக்கு வந்தன. இந்தப்படங்களுக்கும் அந்தப்புதையலுக்கும் ஏதும் சம்பந்தமிருக்குமோ  என்ற எண்ணம் அவருக்குள்  தோன்றியது.

அதை இப்போது  பேரனிடம் கேட்க முடியாது . எனவே நாளை அவர்கள் மலைக்குப் போனபின்பு சில முக்கிய ஆட்களுடன் அவர்களுக்கு  தெரியாமல் அவரும் மலைக்குப் போவது என்று முடிவு செய்து கொண்டார். இதை இராஜாவிடம் அவர் கூறவில்லை .

‘சரிப்பா இராஜா  நாளை நீ  நினைப்பது போல மலைக்கு மாரியப்பன், மண்ணாங்கட்டி ஆகியோரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போய் வா ” என்று தெரிவித்தார்.

அத்துடன் மாரியப்பனையும் கூப்பிட்டு நாளைக்கு இராஜாவுக்கு துணையாக அவர்களுடன் மலைக்குச் செல்லவும் அனுமதி வழங்கினார்..அதோடு மண்ணாங்கட்டியையும்  அவர்களுடன் செல்லும்படியும் கூறினார்.

முத்துச்சாமியின் அனுமதி கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன்  நாளை செல்லலாம் என்று முடிவு செய்து கொண்டனர்.

அதன் பின்னர் முத்துச்சாமி வெளியில் சென்றார் . அவர் அங்குள்ள இரண்டுபேரை ரகசியமாக சந்தித்து நாளை என்ன செய்வது என்று முடிவு செய்து விட்டு அவர்களும் யாருக்கும் தெரியாமல் மலைக்குச் செல்வது என்று முடிவு செய்து கொண்டனர்.

மறுநாள் கீழ்வானம் சிவந்தது .சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு அந்த கிராமத்தின் சுவர்கள் கூட பொன்னிறத்தில் ஜொலித்தது .

                                                            தொடரும்

Share.

Leave A Reply