நம்ம வாழ்க்கையில ரெண்டு விதமா வாழலாம், ஒன்று கவனமோட வாழ்வது மற்றொன்று கவனம் இல்லாமல் வாழ்வது. இன்னிக்கு குழந்தைகள் ஸ்கூல்ல படிக்கிறதா இருந்தாலும், இல்ல பெரியவங்க செய்ற வேலையா இருந்தாலும் எல்லாத்துலயும் கவன சிதறல் அதிகமாக இருக்கிறது.
நாம் சின்னதா இருக்கும் போதுல இருந்து எல்லோரும் ஒழுங்கா கவனமா படி, ஒழுங்கா கவனமா வேலை செய், கவனமா இத பண்ணு, கவனமா அதை பண்ணுன்னு சொல்லுவாங்க. ஆனா இதுவரைக்கும் யாராவது ஒரு வேலையை எப்படி கவனமா பண்ணனும் அப்படின்னு சொல்லிக் கொடுத்திருக்காங்களா? இன்னிக்கு நம்ம பள்ளிகளில் ஆசிரியர் குழந்தைகளை போக்கஸ் பண்ணுங்க, நல்லா கான்சன்ட்ரேட் பண்ணி படிங்க, நல்ல கவனமா படிங்க அப்படின்னு சொல்றாங்க. என்னைக்காவது இந்த ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எப்படி கவனமா படிக்கணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க?
கவனமா ஒரு வேலையை எப்படி பண்ணனும்னு தெரியாம நாமளும் கவனமா ஒரு வேலையே பண்ண பழகிக்கிறோம். அப்புறம் ஒரு சின்ன வேலைய பண்றதுக்கு பல மணி நேரத்தை செலவு பண்றோம் ஏன்னா நம்மளுடைய முழு கவனம் அந்த ஒரு சிறிய வேலையில் இருப்பது இல்லை. ஒரு வேலையை பண்ண தொடங்குகிறோம் பாதியிலேயே போன நோண்ட போயிடுறோம், கைபேசியில் இருக்கிற ஒவ்வொரு ஆப்பையா வாட்ஸ் அப், பேஸ்புக், youtube, நியூஸ் பேப்பர் அப்படி இப்படி அரை மணி நேரம் நம்மளுடைய கவனம் வெவ்வேறு திசையில போயிருது.
ஒரு வாலி முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம், இப்போ அந்த வாலியில் ஒரு சிறிய ஓட்டை இருக்கிறது என்றால் தண்ணீர் சிறிதளவு வீணாக வெளியேறும், அதே வாலியில் பத்து ஓட்டை இருக்கிறது என்றால் வீணாக தண்ணீரின் அளவு அதிகமாக வெளியேறும், அதே நேரம் அந்த வாலியில் 40 ஓட்டைகள் இருந்தால் எல்லா தண்ணீரும் உடனடியாக வீணாக வெளியேறிவிடும்.
நம்முடைய கவனம் எங்கே இருக்கிறதோ அங்கே நம்முடைய சக்தி செல்கிறது, நம்முடைய கவனம் பல பல விஷயங்களில் செல்லும் பொழுது நம் உடலில் இருக்கின்ற சக்தியும் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் செலுத்தும் கவனத்தில் வெளியேறிக் கொண்டே இருக்கிறது. எப்படி 40 ஓட்டைகள் இருக்கின்ற ஒரு வாலியில் தண்ணீர் நிற்பது இல்லையோ அதே போலத்தான் நம்முடைய கவனம் பல திசைகளில் சிதறும் பொழுது நம்முடைய உடலின் சக்தியும் முழுவதுமாக வீணாகிறது.
நம் கவனம் எங்கே செல்கிறதோ அங்கே நம்முடைய சக்தி அதை பின் தொடர்ந்து செல்லுகிறது, எப்படி ஒரு நாய் அதன் எஜமானரே பின்தொடர்ந்து செல்கிறதோ, அதுபோல நம்முடைய கவனம் எங்கே செல்கிறதோ அங்கே நம்முடைய சக்தி பின் தொடர்ந்து வருகிறது.
வேலை என்பது நாம் அடுத்தவர்களுக்காக செய்வது அல்ல, முழு மனதோடு நம் முழு கவனத்தோடு செய்யும்பொழுது அந்த வேலையில் இருந்து வெளிப்படுகின்ற ஒரு ஆனந்த சக்தி நமக்குள் பொங்கி வழியும். சிறியதோ பெரியதோ ஒரு செயலை முழு கவனத்தோடு செய்து முடிக்கும் பொழுது நம் மனதுக்குள் ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி உருவாகிறது, முடிவில்ல சக்தி தடைபடாமல் ஓடுகிறது.
இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு காலையில் இருந்து தூங்கப் போகும் வரை ஏதாவது ஒரு வேலையை ஒரே ஒரு வேலையை மட்டும் முழு கவனமா செய்து பார்க்கலாம். எவ்வளவு வேகமாக ஒரு வேலையை நம்மால் செய்ய முடிகிறது என்பதை முயற்சி செய்து பார்க்கலாம்.