ஒன்பதாம் ஆண்டில்
ஸ்ரீ ஐசுவர்யம்
வணக்கம்
நவ கோள்கள் ஒன்பது நவரத்தினம் ஒன்பது நவராத்திரி ஒன்பது நவக்கிரகம் ஒன்பது நவதானியம் ஒன்பது இப்படி சிறப்புமிக்க ஒன்ப தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ….
ஸ்ரீ ஐசுவர்யம் மாத இதழ் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஆன்றோர், சான்றோர், கவிஞர், எழுத்தாளர், படிக்கும் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் மன்றங்கள் வளர்ச்சியிலும் ,எழுத்தாளர் நூல்கள் விமர்சனம் தமிழ் பணியாற்றும் சான்றோர் அறிமுகம் ,ஆன்மீகம், கதைகள், கவிதைகள், விமர்சனக் கடிதங்கள், தன்னம்பிக்கை கட்டுரை, என பண்முக இதழாக தமிழ் பணியாற்றி வந்த…
ஸ்ரீ ஐசுவரியம் சிறுவர் படம் அட்டை தாங்கி நான்கு ஆண்டுகள் புத்தகமாகவும், பின் இணையதளத்திலும் தனது இதழ் பணியை செய்து விருதுகளும், பாராட்டையும் பெற்ற
ஸ்ரீ ஐசுவர்யம் பல சோதனைகளை கடந்த பின்பு ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
ஸ்ரீ ஐசுவர்யம் தொடர்ந்து தமது தமிழ் பணி ஆற்றும் உங்கள் அன்பாலும், ஆதரவுடனும்,
ஸ்ரீ சாரதாம்பாள் அருள் ஆசியுடன். முருகப் பெருமான் அருளுடன்
ஓம் சரவணபவ.
அனைவருக்கும்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஸ்ரீ ஐசுவர்யம் நிறுவன ஆசிரியர் டாக்டர் செந்தமிழ் வாணி ச. மல்லிகா.