‘ஆத்திசூடி’ என்னும் தொடர் சிவபெருமானை குறிக்கும். சிறுவருக்கும் பெரியவருக்கும் பயன்படத் தக்க அறநெறிகளை ‘ஆத்திசூடி’ என்னும் பெயரிட்டு ஔவை மூதாட்டியார் வழங்கியுள்ளார்.
அவர் சிவபெருமானிடம் ஆழ்ந்த அன்பு உடையவர் என்பதையே ‘ஆத்திசூடி’ என்னும் இந்நூல் பெயர் உணர்த்தும்.
மொழிக்கு முதலில் வரக்கூடிய எழுத்துக்களைக் கொண்டும், வராத சில எழுத்துக்கு உயிர் எழுத்தை சேர்த்தும் முறையாக அறநெறிகளைக் கூறிச் செல்கிறார் ஔவையார்.
ஆத்திசூடியில் 109 நூற் பாக்கள் இடம் பெற்றுள்ளன.
சிறுகதைகளாக சொல்லி உங்களுக்கு ஆத்திசூடியை சொல்லப் போகின்றேன்.
“ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏந்தி ஏந்தி தொழுவோம் யாமே.”
ஆத்திசூடி கதை
1 -அறஞ்செய விரும்பு
பள்ளிக் கூடத்தில் முதல் வகுப்பு அறையில் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்க கரும்பலகையில்…
‘அ’ எழுதி அம்மா, அன்பு, அறம் என எழுதிப் போட்டு நோட்டில் எழுதுங்கள் என்றார் ஆசிரியர்.
பென்சில் தேடினான் ராமு எடுத்து வரவில்லை என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்திருந்தான்.
இதை கவனித்த சோமு தன்னிடம் இருந்த பென்சில் ஒன்றை எடுத்து எழுதக் கொடுத்தான்.
நன்றியுடன் பார்த்த ராமு பென்சிலை வாங்கிக் கொண்டு எழுத ஆரம்பித்தான்.
இதைத்தான் நம்ம ஔவை பாட்டி சொல்றாங்க
‘அறஞ்செய விரும்பு’ பிறருக்கு கொடுக்க ஆசைப்படு என்று.