செம்பருத்திப் பூ (செம்பரத்தை பூ)
வெள்ளை, சிவப்பு ,மஞ்சள், ரோஸ், கலந்து இப்படி பலவண்ணங்களில் கண்ணைக் கவரும் பூ செம்பருத்தி . மருத்துவத்திற்கு சிவப்பு செம்பருத்தியை பயன்படுத்தவேண்டும் . கண்களுக்கு, பார்ப்பதால் குளிர்ச்சி தரும் செம்பருத்தி அதை பயன்படுத்தினால் உடலுக்கு குளிர்ச்சி .
பூவை உலரவைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்தால் முடி நன்கு வளரும் . இளநரை உள்ளவர்கள் இலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும் .

செம்பருத்தி பூவை பறித்து நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து அந்த நீருடன் பூவை அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறைந்து உடல் குளிர்ச்சியாகி நோய்களை குணமாக்கும்.
பெண்களுக்கு வெள்ளை படுதல் குணமாகும் காசநோய் உள்ளவர்கள் செம்பருத்திப் பூவை பறித்து சுத்தம் செய்து விழுதாக அரைத்து சிறு சிறு உருண்டையாக எடுத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும் . இதயம் பலவீனமாக உள்ளவர்கள் செம்பருத்தி பூவை உலர்த்தி அத்துடன் சம அளவு மருதப்பட்டையை சேர்த்து பொடியாக்கி காலை மாலை இரண்டு நேரம் பாலில் கலந்து குடிக்க இதயம் பலப்படும். இரத்த விருத்திக்கு செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் .

நெல்லிக்காய், செம்பருத்தி இலை , தேயிலை இவைமூன்றும் சேர்த்து தயாரித்து குடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் . செம்பருத்தி பூவை சுத்தம் செய்து உலர்த்தி நன்கு காய்ந்ததும் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி தூளை வாயில் போட்டு பசும்பால் குடித்து வந்தால் இல்லற உறவு மேம்படும் .
16 வயதாகியும் பருவம் அடையாத பெண்கள் செம்பருத்தி பூவை சுத்தம் செய்து அரைத்து வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் பருவம் அடையச் செய்யும் சக்தி செம்பருத்திக்கு உண்டு . அதாவது பெண்ணின் உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி அடையச் செய்வதால் பெண்களுக்கு பருவ வளர்ச்சி ஏற்படுகிறது .
மாசிக்காய்
மாசிக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக ஏற்படும் புண்கள், காயங்களுக்குப் பொடியுடன் , தேங்காய் எண்ணெய் கலந்து போட புண் குணமாகும். வெளி மூலத்திற்கும் போட்டால் எரிச்சல், வலி குறையும்.
மூலம் உள்ளவர்கள் வயிற்றுவலி, மூலக்கடுப்பு ஏற்பட்டால் மாசிக்காய் பொடியை சிறிது வாயில் போட்டு பால் அல்லது தண்ணீரில் குடித்து வந்தால் மூலநோய் குணமாகும் . உள்மூலம் உள்ளவர்கள், சுக்கு , மிளகு, பூண்டு, பிரண்டை , கற்றாழை வேர், மாசிக்காய் சம அளவு எடுத்து அரைத்து புளித்த காடி மோரில் கலந்து குடித்தால் உள்மூலம் குணமாகும் .

மலச்சிக்கலை போக்கும் நல்ல மருந்து மாசிக்காய், சிறுவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தலாம். எந்த எதிர்விளைவும் ஏற்படாது . பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலியை போக்கக் கூடியது. மாசிக்காய் பொடி. நாக்கிலும் , உதட்டிலும் வாய்ப்புண்கள் வந்தால் மாசிக்காயை தண்ணீர் விட்டு உரசிப் போட்டால் புண்கள் குணமாகும் .
பால்குடிக்கும் குழந்தைகளுக்கு நாக்கில் பால் அடர்த்தியாக ஒட்டி இருக்கும். அப்படியே விட்டுவிட்டால் நோய் வரும், சுகாதாரமற்று இருக்கும் .எனவே, குழந்தையை குளிக்க வைத்து துவட்டிவிட்டு மாசிக்காயை உரசி நாக்கில் தடவினால் பால் அழுக்கு திரண்டு வந்து விடும்.இவ்வாறு குழந்தைகளுக்கு நாக்கில் உள்ள பால் அழுக்கை எடுக்கலாம் .
மலச்சிக்கல்தான் எல்லா நோய்களுக்கும் முதல் காரணம். மலச்சிக்கல் வராமல் இருக்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். காரட், கொய்யா, பப்பாளி , தக்காளி, வெண்டைக்காய் , வெங்காயம், வாழைப்பழம் போன்றவற்றை உணவில் தினமும் சேர்க்கும் போது மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம் .
மலச்சிக்கலைத் தவிர்த்தால் மூலநோய் வருவதை தடுக்கலாம். வரும் முன் காக்கும் வகையில் அதிமதுரம் நூறுகிராம் , சோம்பு, நூறு கிராம் வாங்கி இரண்டையும் பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை இருமுறை அரை தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வராது. மூலநோய்க்கு டாடா காட்டலாம்.