321.அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும் .
தரும வழி எது என்றால் எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதாகும். கொள்ளுதல் மறந்து வாழ்ந்தாலும் பிற நற் செயல்களால் நன்மை தரும்.
322,பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை .
பங்கிட்டு கொடுத்து உண்பது, பல உயிர்களுக்கும் கொடுத்து உபசரித்தல் அறிவு நூல் கூறும் அறங்களுக்கு எல்லாம் முதன்மையானது .
323.ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
மின்சாரப் பொய்யாமை நன்று .
மதிப்புக்குரிய அறச்செயல்களில் முதன்மையானது எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பது .அதன்பின் அறமே, பொய் பேசாமல் இருப்பது நன்மை தரும் .
324.நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி .
நல்லவழி வாழ்தல் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே பிறவி அறுக்கும் நெறி வாழ்வாகும்.
325.நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை .
வாழ்வில் நிலையில்லா துன்பங்களுக்குப் பயந்து பற்றறுத்து துறந்து வாழ்பவரை விட உயிரை கொல்லப் பயந்து உயிர்களைக் கொல்லாமல் துன்பம் சூழாமல் வாழ்பவர் சிறந்தவராவார் .
326.கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருன்னுங் கூற்று .
உயிர்களைக் கொல்லாமல் ஒழுக்க நெறியுடன் வாழ்பவர் மேல்வீடாகிய மோட்சம் கிட்டும்.உயிர்வதை செய்து உண்ணுபவர்க்கு அவ்வீடு கிட்டாது போகும்.
327.தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை .
தன்னுடைய உயிர் பிரிந்தாலும் செய்யக் கூடாத செயல் பிற உயிர் கொல்லும் வினை .
328.நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும், ஆக்கம் கடை.
கொலை செய்து பொருள் பெருக்க உயர்வு ஏற்படும் என்றாலும், அறிவு ஒழுக்கம் நிறைந்தவர் உயிர்கொலை உயர்வை இழிவாக கருதுவார்.
329.கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து .
கொலை தொழில் செய்யும் மாக்கள் ஊன் இழிவு செயலால் ஒதுக்குவார் மனதளவில் .
330.உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
உயிரற்ற உடம்பு போல் நோயுற்று துன்பத் தீயில் இருப்பவர் கொலைத் தொழில் வாழ்க்கை வாழ்ந்தவர் என்பர் .