திருமூலர் எழுதிய திருமந்திரம் என்றார் நூல் ,தமிழர்களின் பழங்கால நூல்களில் ஒன்று. தமிழர்களின் வாழ்க்கைக்கு நல் வழிப்படுத்தும் விசயங்கள் அனைத்தையும் மந்திரங்களாக வடிவைமைத்து உள்ளார். இந்த திருமந்திர கருத்துக்களை ஸ்ரீ ஐசுவரியம் இணையதள வாசகர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அவர் எழுதிய பாடல்களையும் அதில் உள்ள கருத்துக்களையும் எளிய முறையில் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது. புதிதாக இப்பகுதி வருகிறது படித்து பயன் பெறுங்கள்- கவிஞர் ச. மல்லிகா .
பாடல் -4
இருள் அழித்த ஒளிச் சோதியான்
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்தனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந்து ஏத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே
பொருள்

அனைத்துலகம் மெய்ப்பொருளை உலகுக்கு எல்லாம் உயிராய் உண்மைப் பொருளாய் இருக்கிறவன் இறைவன் . உலகத் தோற்றத்திற்கு மூல காரணமான வித்து ,விதை, மூலப் பொருளை மறைத்து வைத்துள்ளவன், என் உடலை வைத்த இடத்திலிருந்து மறையச் செய்து என்னை இந்த உலகில் வாழவிட்ட இறைவனை பகலும் இரவும் பணிந்து போற்றினேன்.இருப்பது போலத் தோன்றி அழியும் முரணுடைய இவ்வுலகில் அறியாமை இருள் நீங்கி நான் இருந்தேன். -என்கிறார் திருமூலர் .

Share.

Leave A Reply