முன்பு நாட்டு நாய்கள் வளர்த்தோம். அது வீட்டில் வளர்க்கும் விலங்கு.வீட்டில் ஒருவராய் வளர்ந்தது.

குட்டி போட்டால் தெரிந்தவர்கள், பக்கத்தில் எடுத்துச் சென்று வளர்த்தார்கள். நன்றியுடன் வீட்டைக் காத்து வந்தது.

இன்று வெளிநாட்டு நாய்களை வளர்த்து. அதற்கான உணவுகளை வாங்கி கொடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டும், சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டும், வீட்டிற்கு வருபவர்களை குலைத்துக் கொண்டும்  இருக்கிறது. 

முன்பு மீதியான உணவை நாட்டு நாய்களுக்கு வைப்போம்.இப்போது வைப்பது குறைவு.

மீதமுள்ள உணவை குப்பையில் ஒரு ஓரத்தில் கொட்டுவோம்.

நாய்கள் சாப்பிடும்.

இப்போது குப்பைகளில் கொட்டுவது இல்லை.

நாய்களைப் பிடித்து குடும்ப அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். இப்போது அதுவும் செய்வது இல்லை.

நாய்கள் பல குட்டி போடும் அவற்றிற்கு உணவுகள் இல்லை.

பசியால் நன்றி உள்ள நாயை உதாரணம் காட்டிய மனிதகுலம். இன்று வெறுக்கிறது.

நாட்டு நாய்கள் வேட்டை நாய்களாக மாறி மனிதனை வேட்டையாடுகிறது. இதுதான் உண்மை!

இதற்கு, அரசும், மக்களும் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்?
“வாடிய பயிரை கண்டு வாடினார் வள்ளலார்”

நாய்களின் பசிக்கு தீர்வு என்ன?

உயிர்களிடத்தில் அன்பு கொண்ட உணர்வால் இது சமுதாய பிரச்சினையாக சக்தி நகர்வழியாக மிகுந்த மன வலியாக  கேட்கிறேன்.

ஸ்ரீ ஐசுவர்யம் ஆசிரியர் கவிஞர் ச. மல்லிகா.
       13.11.2024

Share.

Leave A Reply