கீ…கீ…. கீ…கீ…கூர் கீ.கீ.கீ../.கூர் ,..கீ….கீ…..கீ…கூர் என்ற சங்கீத குரலுக்குச் சொந்தக்காரர் சின்னஞ்சிறு சிட்டுக்குருவி .
நமது வீட்டிற்கு முன் சில வீட்டிற்குள்ளும் விர் விர்.. என … பறந்து கொண்டு தனது குரலால் கீச்…கீச் என சத்தம் செய்து கொண்டு இருக்கும் சிறிய பறவை சிட்டுக்குருவி
நமதுமுன்னோர்கள் வீட்டில் சிட்டுக்குருவி இருந்தால் வீடு சுபிட்சமாகும் என்று குருவிகளைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே வளர்த்து வந்தனர் .
தனது சிறிய அழகால் வைக்கோல் , சிறு புல்களை தனது அழகால் எடுத்து வந்து கூடுகட்டி அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து தனது குடும்பத்தை அபிவிருத்தி செய்து கொண்டு வாழ்ந்தது ..
வைக்கோல் புல் சிதறி இருந்தா;லும் அசுத்தம் செய்தாலும் கூட்டி அதற்கு இடம் கொடுத்து வளர்த்து வந்தனர் நமது மூதாதைகள் .

நமது குடும்பத்து குழந்தைகள் போல் அங்கும் இங்கும் பறந்து செல்வதே ஒரு அழகுதான் .
தனக்கு வைத்த உணவை உண்டு வேப்ப மரங்களிலும் வசிக்கவும் செய்யும்.
காலை , மாலை முதல் 5-6 மணிவரை கீச்….கீச் ….. என சலசலக்கும் சங்கீதம் காதுக்கு மிக இனிமையாக இருக்கும்.
ஒரே மரத்தில் பல சிட்டுக்குருவிகள் இங்கும் அங்கும் கீச்..கீச் …என தனது சின்னஞ்சிறு கால்களால் தவ்வித் தவ்வி ..பறப்பதே ஒரு அழகுதான் .

இன்றைய கால கட்டத்தில் சிட்டுக்குருவிகள் வளர்ப்பு குறைந்து போனது .செல்போன் கோபுரங்கள் வருகை சிட்டுக்குருவிகள் வளர்ச்சி குறைந்து போய்விட்டது.நாமும் பறவைக்கு உணவு வைக்கும் முறையும் குறைந்து விட்டது..என்றாலும் நாம் ஒவ்வொருவரும் வளர்க்க முயன்றால் சிட்டுக்குருவி வளர்ந்து நமது காதுக்கும் , மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் .
வீடு கட்டும்போது திருஷ்டிபூசணி கட்டுவார்கள். அது ஒரு ஆண்டு முடிந்தவுடன் அவிழ்த்து விடுவார்கள்.ஆனால், அதைக் குடைந்து சிட்டுக்குருவி வாழ ஆரம்பித்து விடும். குஞ்சும் பொரிக்கும் .
நாம் செய்வது அதற்கு சிறிது உணவு தண்ணீர் வைப்பது தான் .
சிட்டுக் குருவிகளின்
அணிவகுப்பு
மின் கம்பம்
மேலும் சிட்டுக்குருவிகளை வளர்க்க சிறு பெட்டி தருகிறார்கள்.. அதை வாங்கி நமது இல்லத்தில் சுவற்றில் மாட்டி வைத்து , சிட்டுக்குருவிக்கு அரிசி குருணை ஒரு தட்டிலும் , குடிக்க, குளிக்க தண்ணீர் ஒரு வாயகன்ற பாத்திரத்திலும் வைத்தால் அதை பயன்படுத்திக் கொள்ளும்.. சிட்டுக்குருவி அந்தப்பெட்டியில் தனது அழகால் புற்களை எடுத்து உள்பகுதியில் மெத்தை போல் அடைத்து வசித்து வாழ்ந்து குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து வாழ ஆரம்பித்து விடும்.

சிட்டுக்குருவிக்கு மணல் குளியல் மிகவும் பிடிக்கும் .மணலில் குளிக்கும். திருஷ்டி கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் .(பைக்) வண்டி கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்து சுற்றிச் சுற்றி வரும். நாமும் வளர்க்கலாமே அதன் இனத்தைப் பெருக்க .
திருஷ்டிக் கண்ணாடியில்
முகம் பார்க்கிறது
சிட்டுக்குருவி .