இன்றைய வாழ்க்கை சூழ் நிலையில் கொரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமி கை குலுக்கும் போது, இருமும் போதும், தும்மும் போதும் மற்றவர்க்கு பரவி ,பரவுவது தெரியாமலே தொற்றி சளி, காய்ச்சலில் தொடங்கி பல உயிர்களைக் கொன்ற பின்பு தான் வைரஸ் குடும்பத்தை சேர்ந்த ‘கொரோனா வைரஸ்’ என கண்டு பிடிக்கப்பட்டது.


நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த முதியோர்கள் தான் அதிகமாக உயிர் இழந்துள்ளனர்.கொரோனா சீன நாட்டில் ஊகான் நகரில் தொடங்கி உலக நாடுகளில் இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ,பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து , தென்கொரியா ,பாகிஸ்தான், இந்தியா, இலங்கை என உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி பயப்பட வைக்கும் அசுரனாய் நிற்கிறது.


இதை அழிக்கும் சக்தியே தமிழ்ப் பண்பாட்டுக் கவசம். கை நீட்டி கை குலுக்கிய நாட்டினர் கைமடக்கி வணக்கம் சொல்வது நம் பண்பாடு , நெஞ்சுக்கு நேராக வணங்குவது நட்பு, உறவுக்கு, குரு, சான்றோர்களுக்கு முகத்துக்கு நேராக வணங்குவது, இறைவனை வணங்க இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்குவதாகும்.

இப்படி நமது பண்பாட்டில் ஆத்மாவிற்கும், அறிவுக்கும், ஆண்டவனுக்கும் செய்யும் வணக்கம் என்பதாகவும் அமைகிறது .


கிராமங்களில் ஊர்த் திருவிழா தொடங்கும்போது, மாவிலை, வேப்ப இலைகளைத் தோரணமாக கட்டி மஞ்சள் நீர் தெளித்து பூஜைகள் செய்து காப்பு கட்டுவார்கள். காப்பு கட்டி விட்டால் அந்த ஊரில் இருந்து வேறு ஊருக்குச் செல்லக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு.மீறிப் போனால் தீமைகள் நடக்கும், தெய்வ குத்தம் ஏற்படும் என்று பயபக்தியுடன் இருப்பார்கள் .அந்தக் கட்டுப்பாட்டை தான் இன்று இந்திய பாரத பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு சட்டமாக கொண்டு வந்து இருக்கிறார்கள் நமது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கொரோனாவை தடுக்க தடை உத்தரவு பிறப்பித்து செயல்பட்டு வருகிறார்கள்..
கொரோனா தொற்று பரவாமல் இருக்க மக்கள் ஆகிய நாம் கட்டுப் பாட்டுடன் வீட்டிற்குள் அமைதியாக இருப்பது தான் விலையற்ற உயிரைக் காக்கும் உன்னத வழி.


மேலும் அம்மை நோய் ஏற்பட்டால் வேப்ப இலையை வாசல் படியில் சொருகி தனிமைப்படுத்தி வேப்ப இலையால் தடவிக் கொடுத்து எந்த மருந்தும் போடாமல் குணமாக்குவது மாரியின் சக்தியாகும் .வேப்ப இலைக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தியும், மருத்துவ குணமுமே அம்மையை குணமாக்குகிறது .


அந்த சமயத்தில் முக்குட்டு எண்ணெய் என்று உச்சித்தலையில் வைப்பார்கள் .நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்,வேப்ப எண்ணெய்ஆகும்.நல்லெண்ணெய் குளிர்ச்சி, தேங்காய் எண்ணெய் வெப்பம், வேப்ப எண்ணெய் எதிர்ப்பு சக்தி தரக்கூடியது .இந்த எண்ணெய்களை தலையின் உச்சியில் வைப்பதால் உடலுக்குள் இறங்கி குணமாக்குகிறது .


காய்ச்சல் வந்தால் உடலில் வேப்ப எண்ணெயைத் தடவி விடுவார்கள் .சில மணி நேரங்களிலே உடலில் சூடு குறைந்து காய்ச்சல் குணமாகும் .
சித்தர்கள் வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் கலந்தே விளக்கு ஏற்றுவார்கள் .நல்லெண்ணெய் சுவாசத்திற்கு நல்லது. வேப்ப எண்ணெய் கிருமி நாசினி எந்த கிருமியும் தாக்காமல் எதிர்ப்பு சக்தி தருவதற்காகவும் ,அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி இருக்கிறார்கள் .
நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொன்றம் அற்புதமான செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் உடல் சிலிர்க்க வைக்கும்.நாம் அவர்கள் வழியில் நடந்தாலே மேன்மை கிடைக்கும்.வாழ்வாதாரத்திற்காக வெளிநாடு சென்று திரும்பி வந்தவர்களுக்கு எல்லாம் கொரோனா தொற்று மனதை வருத்தம் அடையச் செய்கிறது ஓடிக்கொண்டே இருந்த மக்கள் இன்று குடும்பத்துடன் பேச, நம் பண்பாட்டை நேசிக்க ஒரு மறு சுழற்சி என்று எண்ணி இறைவனை இருந்த இடத்தில் இருந்தபடி தியானம் செய்வோம்.

மத்திய மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று அவர்களுடன் ஒத்துழைப்பு கொடுப்போம். நல்ல மாற்றம் வந்து நம்மை இயக்கும் புதிய சக்தியாய் கொரோனாவை வென்று புத்துயிர் பெறுவோம்.

Share.

Leave A Reply