இன்றைய கவிஞர்கள்தான் நாளை நம் பெருமைக்குரிய வரலாற்றின் படைப்பாளர்கள் .


நாம் நேற்றும்,இன்றும்,நாளையும் பெருமையுடன் போற்றிப் பாதுகாக்கும் இலக்கியங்கள் யாவும் செய்யுட்களாகவும், கவிதைகளாகவும் தான் அமைந்துள்ளன.இவைதான் நமது பாண்டிய வரலாறுகளாக அமைந்துள்ளன.வரலாற்றின் சொந்தக்காரர்கள் நாம்.

கவிதை இலக்கியம் எல்லா மொழிகளிலும் உண்டு.ஆனால் மரபுக் கவிதை இலக்கியம் என்பது தமிழ் மொழியில்தான் உண்டு.
கவிதைகளை இப்படித்தான் எழுத வேண்டும் என்று வரைமுறையாகச் செய்து கவிதைகளை யாத்த பெருமை நம் தமிழ்ப் புலவர்களுக்குத்தான் உண்டு.

தமிழில் இருந்து யாப்பெருங் கலக் காரிகை என்ற நூல் முழுக்க முழுக்க கவிதை இலக்கணம் பற்றியது தான்.
தமிழ்க் கவிதைகளில் விருத்தப்பா எழுதுவது மிகவும் சிரமம். இதை விட வெண்பா எழுதுவதும் மிகவும் சிரமம் தான். ஏனென்றால் வெண்பா இலக்கணத்தில் ஒவ்வொரு சொல்லையும் அடுத்து நெட்டெழுத்தில் தான் இந்த -இந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்,  குற்றெழுத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் வரைமுறை உண்டு.



கவிதை இலக்கியம்  
இதைவிடக் கஷ்டமானது கட்டளைக் கலித்துறையில் வெண்பா இலக்கணமும் இருக்கவேண்டும். நெட்டெழுத்தில் துவங்கினால் அந்த வரியின் அடியில் 17 எழுத்துக்களும் குற்றெழுத்தில் துவங்கினால் 18  எழுத்துக்களும் தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
கவிஞனைப் பெரிதும் சோதிக்கக் கூடியது தான் இந்த கட்டளைக் கலித்துறை செய்யுள். 
இத்தனைக் கஷ்டமான கட்டளைக் கலித்துறையில் தான் செய்யுள் இலக்கணத்தை சிறப்பாக உரைக்கிற யாப்பெருங் கலக் காரிகை நூல் அமைந்துள்ளது..என்பது மிகவும் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயமாகும்.இதற்குத் தமிழ் மொழி தான் கைகொடுத்துள்ளது  எனலாம்.–இப்போதும் இது போன்ற ஒரு வரையறை செய்து கொண்டு கவிதை இலக்கணத்தை வேறு எந்த மொழியிலும் பாட முடியாது என்பது தான் நமது தமிழ்மொழிக்குள்ள மாபெரும் சிறப்பு ஆகும்.
மோனை-எதுகை 
ஒரு மொழியின் இனிமை என்பது அதன் சொல் வளத்தில் தான் அமைந்துள்ளது.இந்த சொல் வளத்துக்குத்தான் மோனை-எதுகை என்று பெயர்.மோனை என்பது இரு சொல்லின் முதலாவதாக எழுத்து ஒன்று போல் இருப்பது ஆகும்.


எதுகை என்பது இரு சொல்லின் இரண்டாவது எழுத்து ஒன்று போல் இருப்பது ஆகும்.

எறும்பு எத்தனை என்பதில் இரண்டு சொல்லிலும்-முதலாவது எழுத்தாக ‘எ’ வந்துள்ளதால் இதுதான் மோனை ஆகும்.
(உ -ம்) பார்த்தான்-சேர்த்தான் -கண்டான் -உண்டான் என்பது போல முதல் எழுத்து  மட்டும் மாறிவந்து பிற எழுத்துக்கள் ஒன்று போல் வருவது எதுகை ஆகும்.இதுபோன்ற எதுகைச் சொற்கள் தமிழில் ஏராளமாக உள்ளது.
  • மரபுக் கவிதைக்கு இந்த எதுகை தான் மிக மிக முக்கியம் ஆகும்.
  • தமிழ்க் கவிஞர்கள் சிலர் முன்னாலும்,பின்னாலும் எதுகை வைத்து எழுதுவார்கள் .ஓசைநயமும் ஒத்துஇருக்கும்-இதற்குத்தான் சந்தக் கவிதை என்று பெயர்.
  • குறிப்பு-திருப்புகழில் தான் முழுக்க முழுக்க சந்தக் கவிதை முறையில் எழுதப்பட்டது ஆகும் .தமிழ் மொழி தவிர வேறு எந்த மொழியிலும் இயற்றிட முடியாது /காரணம் தமிழில் தான் எதுகைச் சொற்கள் மிக ஏராளமாக உள்ளது.
  • இந்த எதுகைச் சொற்களில் மட்டும் இனிமையாக இல்லை…பொருளும் இனிமையாக உள்ளது–சொற்கள் தமிழில் அடங்கியுள்ள நுட்பம் அளவிடற்கரியது.
  • (உ-ம்) குறளில்
  • கண்ணுடையவர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு 
  • புன்னுடையோர் கல்லாதவர் 
  • கவிஞர்களே  எழுத்தாளர்களே ? உங்கள் கவிதைப் படைப்புகளில் எப்போதும் சிறப்பான சொற்களையே எழுதுங்கள்.எக்காரணம் கொண்டும் பாமரர்கள் சில நேரங்களில் -சில இடங்களில் தமிழைச் சிதைப்பது-சினந்து பேசுவது போல உங்களின் படைப்புகளில் இடம்பெறச் செய்யாதீர்கள்.
  • மரபுக் கவிதைகள் இன்று மதிப்பிழந்து போனது ஏன் ?
  • தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாகக் கருதப்படுவதும் மரபுக் கவிதை தான் -தமிழில் எதுகைச் சொற்கள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன.அதனால் தான் மரபுக் கவிதைகளான விருத்தம் வெண்பா ,கலித்துறை போன்ற கவிதைகளை போன்ற கவிதைகளை தமிழில் எழுதுவது மிகவும் எளிது.
  • *தமிழில் மரபுடன் கவிதை எழுதுவதைச் செய்யுள் என்பார்கள்-ஆனாலும் தற்காலத்து மரபுடன் கவிதை எழுதினாலும் ,பாடினாலும் கவிதை என்றே சொல்கிறார்கள்/காரணம் எதுகை சொற்கள் நிறைய நிறைய குவிந்து எழுதுவதாலும் கவிமன்றங்களில்பாடுவதாலும்..
  • ஒருகவிஞன் தான் கவிதை மூலம் சொல்ல நினைக்கின்ற கருத்துக்களுக்கு இடையிடையே எதுகை சொற்கள் வந்து அமர்ந்து கொள்வதால் கூறவந்த பொருளின் தன்மை வேகம் சிறப்புக்கூட சில நேரங்களில் தரம் குறைந்து இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தி விடுகிறது.சில கவிஞர்களின் எழுச்சிகரமான கருத்துக்களைக் கூட தளர்ந்து தான் சொல்ல வேண்டியுள்ளது.இலக்கணத்தை மட்டுமே சிறப்பாக எடுத்துக்கொள்ளும் மரபுக் கவிதைகள் செவி மடுத்துக் கேட்போரின் மன எழுச்சியில் கூட வேகம் குறைந்த நிலையையே ஏற்படுத்துகிறது.
  • இந்தக் கருத்து எந்த அளவு உண்மை நிலையானது என்பதை-இன்றைய நாளின் எழுச்சிக் கவி அரங்குகளில் நிதர்சனமாகக் காணலாம்.இந்த இடைவெளி இடங்களைத் தான் புதுக்கவிதை பாடுபவர்களும் எழுதுபவரும் கையாண்டு வருகிறார்கள்.
  • புதுக்கவிதைகளை எழுதுபவர்களும்-அதனை மேடையில் முழங்கும் கவிஞர்களும் மரபுக் கவிதைகளுக்கு விரோதிகள் அல்ல/ மரபை மதிப்பவர்கள் தான்.இப்படித்தான்  இன்றைய சூழ்நிலையில் கவிஞர்களின் பட்டாளம் மிகவும் பெருகியுள்ளது.
  • மரபுக் கவிதை படிப்பவர்களும்,புதுக்கவிதை படிப்பவர்களும்-நமது மொழியின் சிறப்பை எந்த வகையிலும் கீழிறக்கம் செய்யும் பணியில் இல்லாமல் இருப்பது தான் இன்றைய கவிதை.இலக்கியம் வளர்வதற்கான அரிய பணியாகும்.புதுக்கவிதைகளில் எந்தவொரு கருத்தையும் எளிமையாகவும்-விரைவாகவும்-சிலிர்ப்பு மிக்கதாகவும் எழுதிவிட முடியும்.ஆனாலும் புதுக்கவிதை நடையில் கூட முடிந்த வரை  மரபுக் கவிதைகளின் இலக்கணத்தை தமிழ் மொழியின் சிறப்புக் குறையாமல் எழுதப்படும் கவிதைகள் இன்றும் போற்றப்படுகிறது என்பது நம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

இறுதியாக ..

இன்றைய கவிதை இலக்கியத் துறையில் ஈடுபட்டுள்ள அனைத்துக்கவிஞர்களும் தமிழ் மரபுக் கவிதை இலக்கணத்தை அறிந்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல..நிச்சயம் தமிழ் கவிதை இலக்கணம் பற்றிய யாப்பிலக்கண நூல் ஒன்றை எழுத்துத் துணைக்கு வைத்திருப்பது மறுக்கக்கூடாத உண்மை ஆகும்.
Share.

Leave A Reply