மருத்துவத் தொடர்-60-61
உப்பு–6
சமையல் செய்யும் போது நீராவி அடித்தால் உப்புத்தூள் சிறிது எடுத்து நீராவிபட்ட இடத்தில் தேய்த்தால் எரியும்.ஆனால், சரியாகிவிடும் .கொப்பளம் , புண் வராமல் உப்பு தடுத்து விடும்.
எண்ணெய் தெறித்து கைகளில் பட்டு விட்டாலும் உப்புத்தூள் தடவினால் கொப்பளம் வராமல் சரியாகும் .
தொண்டையில் வலி ஏற்பட்டால் சிறிது நீரை சுடவைத்து அதில் சிறிது உப்பு போட்டு தொண்டை வரை செல்லும்படி வாய் கொப்பளித்து துப்ப வேண்டும். உப்பும் சுடுநீரும் பட்டு தொண்டை வலி குறையும்.
தலையில் நீர் கோர்த்து தலை பாரமாகி தலைவலி வந்தால் உப்புக்கல்லை வடச்சட்டியில் போட்டு வறுத்து இளஞ்சூட்டில் தலைக்கு ஒத்தனம் கொடுத்தால் நீர் கோர்த்தது நீங்கி தலைவலி, தலைபாரம் போய்விடும்.
“உப்பில்லா பண்டம் குப்பையிலே “
” உப்பிட்டவரை உள்ளவும் நினை “என உப்புப் பற்றிய பல பழமொழிகள் உள்ளன.
அதனால் தான், உணவு உண்ண வாழை இலை போடும்போது முதலில் உப்பை சிறிது வைப்பது தமிழர் பண்பாடாக வழக்கத்தில் உள்ளது .
உப்பு நமது அன்றாடத் தேவைக்கு பயன்படும் முக்கியமான ஒன்றாகும் .
நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஊறுகாய், வற்றல் இவற்றிற்கு உப்பு பெரிதும் பயன்படுகிறது, பதப்படுத்தவும் உப்பு பயன்படுகிறது.
உப்பை அளவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரத்த கொதிப்பு உள்ளவர்கள் மிக குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது .பொதுவாக நாற்பது வயதை தாண்டியவர்கள் உப்பு குறைவாக சாப்பிடுவதே உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.
உப்பு சத்தியாகிரகம் இன்றும் நம் உள்ளத்தில் நிறைந்து இருக்கிறது என்றால், நம் நாட்டுப் பற்றுக்கும் எடுத்துக் காட்டாகும் .
கீரை சூப்
கீரையை சுத்தம் செய்து, வெட்டி வைக்கவும், தக்காளி, சீரகம், மிளகு, இஞ்சி , பூண்டு, வெங்காயம் தேவைக்கு உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.
வெந்தபின் கடைந்து கூழாக்கவும், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து சேர்க்கவும் .
கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகள் விரும்பி கீரை சூப் சாப்பிடுவார்கள்.
உருளைக் கிழங்கு -66
கொழு கொழு என்று இருக்கும் குழந்தையைப் பார்த்து உருளைக்கிழங்கு மாதிரி இருக்கு என்பார்கள். உடல் பருமனுக்கும், உருளைக் கிழங்குக்கும் சம்பந்தம் உண்டு .
உடல் எடையை கூட்டக் கூடியது உருளைக்கிழங்கு , கார்போஹைட்ரேட் சத்து நிறைந்து இருக்கிறது . மெலிவாக இருப்பவர்கள் உணவில் உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் .
உருளைக்கிழங்கு வாயு என ஒதுக்கி வைத்து விடுவார்கள். உருளைக்கிழங்குடன் இஞ்சி, பூண்டு சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை வராது ..
சப்பாத்தி, பூரிக்கு குருமா வைத்தும், சாம்பார், ரசத்திற்கு, உருளைகிழங்கு மசாலா போட்டு வறுத்தும் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
வட்ட வடிவத்தில், நீல வடிவத்தில் உருளைக் கிழங்கை வெட்டி எண்ணெயில் பொறித்து கொடுக்க சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் .உடல் எடையும் கூடும் .விளையாடும் போது போதிய சக்தியும் கிடைக்கும் .
பல காய்கள் போட்டுமண்டி ,அவியல், பொரியல் இப்படி எது செய்தாலும் உருளைக்கிழங்கின் சுவை தனியாகத் தெரியும்.குழந்தைகளுக்கு நல்ல உணவும், ஊட்டச்சத்தாகவும் இருக்கும். .சர்க்கரை நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .உடல் பருமனாக இருப்பவர்களும் சாப்பிடாமல் இருப்பது நல்லது ..
தொடரும்