மஞ்சள் காமாலை
கீழாநெல்லி மஞ்சள் காமாலை நீங்க நல்ல மருந்தாகும் .
கீழா நெல்லி, கரிசலாங்கண்ணி இலை, தும்பை இலை சம அளவு எடுத்து அரைத்து 10 நாட்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
தும்பை இலையுடன் ,சிறிது வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பற்றுப் போட்டாலும் மஞ்சள் காமாலை குறையும் .
வேப்பங்கொழுந்தை நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.அத்துடன் அரைப்பங்கு உப்பு, ஓமத்தை வறுத்து பொடி செய்து நாள்தோறும் சாப்பிட மஞ்சள் காமாலை நீங்கும் .
பழுத்த வாழைப்பழத்தின் தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்துவிட வேண்டும். காலையில் அப்பழத்தை எடுத்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும் .
கீழாநெல்லி செடியை கழுவி சுத்தம் செய்து மைபோல் அரைத்து மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும் .
சிறுநீரக வீக்கம் ஏற்பட்டால் கீழாநெல்லி சாருடன் தேன் கலந்து குடித்தால் குணமாகும் .
கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து சொறிசிரங்கு இருக்கும் இடத்தில் பூசி ஒருமணி நேரம் கழித்து குளித்தால் சொறி சிரங்கு குணமாகும் .
விக்கல் தொடர்ந்து வந்தால் கீழாநெல்லி வேரை வாயில் ஒதுக்கிக் கொண்டால் விக்கல் உடனே நிக்கும் .
‘உடம்பில் ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் சிறுபுண்கள் நீங்க கீழாநெல்லி இலைகளை எடுத்து சுத்தம் செய்து அதை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு நீங்கும் .
கல்லீரல் நோய் உள்ளவர்கள் கீழாநெல்லி , கரிசலாங்கண்ணி இரண்டையும் அரைத்து சம அளவில் 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும் .
முடிவளர கீழாநெல்லி வேரை காயவைத்து சிறு சிறு துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு தேய்த்து வர முடிவளரும் .
விரதம்
நோய் வராமல் தடுப்பதற்காகவே விரதம் ,உபவாசம் (உண்ணா விரதம்) இருக்கும் போது நமது உடல் உறுப்புகள் ஒய்வு எடுத்துக் கொள்கின்றன .

விரதம் இருக்கும் போது நமதுமன உறுதி மேன்படுகிறது. கண்விழித்து விரதம் இருக்கும் போது கடினமாக இருந்தாலும் , விரதம் இருந்த பிறகு உடலும் உள்ளமும் புத்துணர்வு பெற்று புது பொழிவு பெரும்.
இவ்விதம் விரதங்கள் இருப்பதால் மனதை கட்டுப்படுத்தும் உறுதி வருவதால் நோய் நம்மை நெருங்க அஞ்சும் ,விரதங்கள், நோயை தடுக்கும் எளிய முறை .