ஒரு டம்ளர் அளவு சரி விகிதத்தில் பாலும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி தட்டிப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் .
உடல் வலு குறைந்தவர்களுக்கு இழந்த வீரியத்தைப் பெற கொத்தமல்லி பயன்படுகிறது.
கொத்தமல்லி சட்னி, கொத்தமல்லி துவையல் மற்றும் பொரியல், குருமா, குழம்பு போன்றவற்றில் கொத்தமல்லித் தழை சேர்த்து உணவில் உண்டால் உடல் வலிமை பெற்று இழந்த வீரியத்தை பெற முடியும்.
குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் கொத்தமல்லிதழையை ஊறவைத்து வடிகட்டி கொடுக்க வேண்டும்.இவ்விதம் கொடுத்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.
வாய் நாற்றம் அடித்தால் கொத்தமல்லி போட்டு ஊறவைத்த தண்ணீரை வாய் கொப்பளித்து வர வாய் நாற்றம் போகும் .
சிலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அவர்கள் கீழே குறிப்பிட்டபடி குடித்தால் ஏப்பம் வராது .
இஞ்சி தட்டிப்போட்டு சோம்பு, கொத்தமல்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் ஏப்பம் வருவது குறையும், பித்தம் ,தலை சுற்றல் இவற்றையும் கட்டுப்படுத்தும்
உதட்டில் ஏற்படும் கருப்பு நிறம் மாற பயன்படுத்தலாம் .இரவுபடுக்கப் போவதற்கு முன் கொத்தமல்லி இலையை கசக்கி சாறெடுத்து உதட்டில் தடவிவர நிறம் மாறும் .
மார்பு படபடப்பு ஏற்பட்டால் சிறிது கொத்தமல்லியை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் மார்பு படபடப்பு குறையும்.
கொத்தமல்லியுடன் ,ஒரு கிராம்பு வைத்து மென்று தின்றால் வாய் துர்நாற்றம் போகும்.சீரண சக்தியும் ஏற்படும் . கொத்தமல்லி விதையில் நறுமண எண்ணெய் உள்ளது .நறுமண எண்ணையில் கொழுப்பு , கொரியாண்டிரால் என்றும் டெர்பிளாய்டு உள்ளது .
22. குப்பைமேனி
குப்பைமேனிக்கு புண்களை ஆற்றக்கூடிய குணம் உண்டு .
சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் குப்பைமேனி இலை . மஞ்சள் இரண்டையும் விழுதாக அரைத்து சிரங்கு அரிப்பு உள்ள இடங்களில் தேய்த்து குளித்து வந்தால் சிரங்கு இல்லாமல் போகும். தொடர்ந்து தேய்த்துக் குளித்து வந்தால் தழும்பு கூட மறைந்துவிடும்.
குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, மஞ்சள் சேர்த்து விழுதாக அரைத்து இரவு பூசி வந்தால் கை, கால்களில் மெல்லிய ரோமம் வளர்வது உதிர்ந்து மறுபடியும் முடி வளராது .
சுக்கு,மிளகு, திப்பிலி, சீரகம், அதிமதுரம் குப்பைமேனி இலை, தண்டுடன் இவைகளை வெயிலில் காயவைத்து அரைத்து உருண்டை செய்து உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்.சளி இருமல் வரும்போது சாப்பிட்டால் சளி இருமலில் இருந்து விடுபடலாம்.
படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு படுக்கைப் புண் வந்தால் குப்பைமேனி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி புண் மீது கட்டி வந்தால் புண் குணமாகும்.
23. தக்காளி
ஏழைகளின் ஆப்பிள் தக்காளி.இரத்தத்தை சுத்தமாக்க பயன்படுகிறது .
வைட்டமின் ‘சி’ தக்காளியில் இருப்பதால் வைட்டமின் ‘சி’ குறைவினால் வரும் நோயை தடுக்க தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது .
வாதம் உள்ளவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது .
தக்காளியை பச்சையாக சாப்பிடுவது நல்லது .குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தொலியை உரித்துக் கொடுக்க வேண்டும். தொலி உள் நாக்கில் ஒட்டிக் கொள்ளும் என்பதால் உரித்துக் கொடுக்க வேண்டும்.கொதிக்கும் நீரில் தக்காளியை போட்டு சிறிது நேரம் சென்று எடுத்தால் தொலியை உரிக்கலாம் .
தக்காளியை தொக்கு, சூப்பு, சட்னி , ஜாம், தக்காளிச் சாப்பாடு இப்படி பல வகையிலும் பயன்படுத்தி பலன் பெறலாம் .’
உடல் வீக்கம், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தக்காளிக்காய் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
குண்டு குண்டு தக்காளி
குழம்பில் போடும் தக்காளி
வரி…வரியாய் தக்காளி
வடிவம் ஆன தக்காளி
பச்சை நிறக் காயை
பருப்பில் போட்டு உண்ணலாம்
சிவப்பு நிறப் பழத்தை
சிறுகக் கடித்து உண்ணலாம்
ஏழையின் ஆப்பிள் தக்காளி
எப்போதும் கிடைக்கும் தக்காளி
வைட்டமின் சத்து நிறைந்தது
வாங்கி உண்டு மகிழலாம்.
ஒற்றை மலர்
தந்தை தந்த
பலநூறு பணம்
தராத இன்பத்தை
உழைத்த ஐந்து ருபாய்
தந்தது போல ….
கடையில் வாங்கிய
பலவண்ண மலர்கள்
தராத இன்பத்தை
வீட்டுத் தோட்டத்து
ஒற்றை மலர் தந்தது
”செடி வளர்ப்போம் ,பயன் அடைவோம்
சுத்தமான காய், சுகாதார வாழ்வு ”