57. சோற்றுக் கற்றாழை 

கற்றாழை வகையைச் சேர்ந்தது  சோற்றுக் கற்றாழை. சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியது .

குழந்தை பிறந்து தொட்டில் கட்டும் போது கற்றாழைச் செடி ஒன்றை தொட்டிக்கு மேல் பக்கத்தில் கட்டுவார்கள் .சூரிய வெளிச்சம் பட்டாலே வளரும் செடியாகிய இச்செடியும் பசுமையாக வளர்ந்து கொண்டே இருக்கும்.

சோற்றுக் கற்றாழை புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியது .எனவே தான் ,குழந்தைகள் புத்துணர்வுடன் இருக்க குழந்தை பார்க்கும் இடத்தில் கட்டி வைக்கிறார்கள் .

 மேலும் புண், காயங்கள் ஏற்பட்டால் உடனே எடுத்து காயத்தில் போட்டால் குணமாகும் தன்மை உடையது .’ஆண்டி செப்டிக்’ மருத்துவக் குணம் இயற்கையாகவே சோற்றுக் கற்றாழையில் உள்ளது .

சோற்றுக் கற்றாழை

மெலிந்து உடல் சூடு உள்ள சிறுவர்களுக்கு சோற்றுக் கற்றாழை மேல் பகுதி கீழ் பகுதியை சீவி எடுத்து விட்டு நடுவில் உள்ள வெண்மையாக இருக்கும் சதைப் பகுதியை எடுத்து  பால் அல்லது மோரில் கலக்கி குடித்து வந்தால் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படுவதால் சிறுவர்கள் சோற்றுக் கற்றாழை  போல் சதை போட்டு விடுவார்கள் .

சோற்றுக் கற்றாழை (வெண் சதை) முகத்தில் தேய்த்து  அரைமணி நேரம் சென்றவுடன் குளித்தால் முகம் புத்துயிர் பெரும், முகம் பளபளக்கும் .

சோற்றுக் கற்றாழை இருக்கும் இடத்தில் பூச்சி, விஷப் பூச்சிகள் பக்கத்தில் வராது .

மாத விலக்கு, வெள்ளை படுதல் குணமாக  சோற்றுக் கற்றாழையில்  உள்ள வெண்பகுதியை சீவி கூழாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

வீட்டில் தொட்டிச் செடியாக வளர்த்துக் கூட பயன் அடையலாம் .

உடற்பயிற்சி 

குழந்தை பிறந்தவுடன் கை, கால்களை நீட்டி மடக்கி, குழந்தையை தூக்கிப் பிடித்து , இப்படிச் செய்யும் உடல் பயிற்சிதான் நாம் வளர வளர விளையாட்டு, யோக, உடற்பயிற்சிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபட்டு வருகின்றது .

முறையாக செய்ய எங்கே நேரம் என சொல்பவர்கள் தான் அதிகம். வேலைகளை தவறாமல் முறையாக செய்வதே உடல் பயிற்சி தான். எளிய பயிற்சி நடப்பது , ஓடுவது, தியானம் , மூச்சுப்பயிற்சி, இவற்றில் எதோ ஒன்றை செய்து கொண்டே இருந்தால் போதும் ஆரோக்கியம் உங்கள் கைகளில், உங்கள் எண்ணங்களில் தான் உள்ளது.

58. வசம்பு  

வசம்பு என்று பெயர் சொன்னால் இதன் மருத்துவ பலன் குறைந்து போகும் என்று இதற்கு பெயர் சொல்லாதது எனக் கூறுவார்கள் .

குழந்தைகளுக்கு மிகவும் பயன் படக்கூடிய மருந்தாகும். குழந்தைகள் பால் குடிக்கும் போது  பால் கவுச்சி வீசும்.அதை குழந்தை சுவாசித்தால் ஆரோக்கிய கேடு  ஏற்படும் . எனவே குழந்தைகளுக்கு வசம்பை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வளையல் போல் கட்டி  கைகளில் போட்டு .விடுவார்கள் .

குழந்தை கைகளை ஆட்டும் போது வசம்பு வாசம் வருவதால் நல்ல வாசனை கிடைப்பதுடன் சீரணமாகவும் பயன்படுகிறது .

பால் சீரணமாகி செரிக்காமல் குழந்தை அழுதால் வசம்பை நெருப்பில் வாட்டி உரசி சுவாசிக்க மூக்கில் காட்ட  வேண்டும்..சிறிது எடுத்து இரண்டு பின்கைகளில் தடவ வேண்டும். கால்களில் சிறிது தடவ வேண்டும் .

இவ்வாறு தடவுவதால் குழந்தை கை, கால் ஆட்டும் போது வசம்பு,  சுவாசிக்கப்படுவதால் பால் சீரணமாகி செரித்து விடும்..வயிற்று உப்பல், வலி போய்விடும்.

வசம்பை நாக்கில் மிகச்சிறிய அளவே தேய்க்க வேண்டும்.அதிகமான வசம்பை நாக்கில் தடவக் கூடாது . 

Share.

Leave A Reply