கவிதை -கவிஞர் செந்தமிழ் வாணி ச. மல்லிகா .
கொரோனா தொற்று வேப்பெண்ணை மருந்து
நாடு வளர நாடு விரிவுபடுத்த
அண்டை நாட்டை அடக்க அணுகுண்டு
வீடு வளர வெளிநாடு செல்ல
அன்னிய மொழி கற்று பயணம்
ஈடு தாங்கி தகுதி வளர்த்து
தனிமைப் பட்டு அன்னிய நாட்டில்
ஈன்றாள் பிரிந்து இன்னல் பொறுத்து
இல்லாள் நினைவில்; வேலை செய்ய
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ்
கொன்றது பல உயர்களை அசுரவேகத்தில்
தீனம் தொட்ட கரங்களில் பரவி
தொற்று நோயாய் பரவியது உலகில்
வினயம் செய்ததோ சீனா தன்செயல்
தன்னை சுட்டு பிறரையும் சுடுகிறது
மீட்டுதல் இந்த தருணத்தில் கடமை
பரவாது தடுக்க அவசர நடவடிக்கை
சித்தர்கள் செய்த மருத்துவ மகிமை
சிறந்த தோர் தடுப்பு மருந்து
மத்தித்தல் முறையில் வேப்பிலை பயன்படும்
உடலில் வேப்பெண்ணை தேய்த்து தடவ
நித்தம் அழிவை நித்தன் காப்பான்
தமிழர் பண்பாடு வணக்கம் சொல்தல்
சித்தன் முருகன் சிவன் வணங்க
காக்கும் சக்தி மாரி அருள்வாள்