45. பெரியாரைத் துணைக் கோடல்

441.அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் .
தர்மநெறி தெரிந்த பெரியோர் போதனைகள் நன்மை பயக்கும் .எனவே , அவர்களுடன் நட்பு கொண்டு மேன்மை அடையும் வகை அறிந்து வாழவேண்டும் .
442.உற்றநோய் நோக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல் .
தனக்கு வரும் துன்பநோய் போக்கி இனி துன்பம் வராமல்காத்துக் கொள்வது எப்படி என சிந்தித்து செயல் படுபவர் பெருமையைப் போற்றி அவருடன் நட்புக் கொள்ள வேண்டும் .
443.அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமாரக் கொளல் .
அரிதாக கிடைப்பதில் அரியது சான்றோர்களைப் மதித்துப் போற்றி தனக்கு சுற்றமாக்கிக் கொள்வதாகும் .
444.தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை .
தம்மை விட அறிவில் சிறந்தவரை தமக்குச் சுற்றமாக்கி நல்வழியில் நடப்பது வலிமைகளில் எல்லாம் தலைசிறந்ததாகும் .
445.சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் .
மக்களுக்கு நல்ல வழிகளை ஆய்ந்து கூறும் அமைச்சர் நடத்தை அறிந்து கேட்டு நடக்கும் அரசன். சுற்றி இருப்பவர்களையும் ஆய்ந்து அறிந்து துணையாக வைத்துக் கொள்ள வேண்டும் .
446.தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில் .
அறிஞர் கூட்டத்தில் ஒருவராய் இருந்து நற்காரியங்கள் செய்யும் திறமை மிக்கவரை பகைவர் கூட அவர் வெற்றியை தடுக்க முடியாது .
447.இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே
கேடுக்குத் தகைமை யவர் .
கண்டித்து புத்தி சொல்லி துணையாக இருந்து ஆளும் தலைவனை கெடுக்கும் தகுதி உடையவர் யார் ?
448.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் .
கண்டித்து புத்தி சொல்ல ஆள் இல்லாமல் மனக்கலங்காத அரசன் , கெடுக்கும் பகை இல்லை என்றாலும் அவனுக்கு கேடு நேரும் ..
449.முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாஞ்
சார்பிலார்க்கு இல்லை நிலை .
பெரியோர்கள் சொல்லும் அறிவுரைக்கு நன்மை அவருக்கில்லை. அதுபோல அரணாகத் தாங்கும் துணை இல்லாதவர்க்கு நிலையான வாழ்வில்லை .
450.பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் .
பலருடைய பகையை கொக்கி போட்டு இறைப்பது போன்றது. நல்லவர் ஆகிய பெரியவர் நட்பை விடுவது .