341.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் .

எதன்மீதும் பற்று இல்லாமல் மனதை கட்டியவன் குழப்பங்களில் எல்லாம் நீங்கியவன். வாழ்வில் துன்பமாகிய குழப்பம் இல்லாமல் போகும்.

342.வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல .

விரும்பிஉண்டு உறையும் மனையைத் துறந்து பற்றற்ற நிலையில் இவ்வுலக நிலைமை அறியாமை பல புரியும்.

343.அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு

துறவில் வலிமை வேண்டும் என்றால் ஐம்புல சுகங்களை விட்டுவிடவேண்டும் .அவ்வாறு விட்டு விட்டால் முழுமையான அடக்கம் காலத்தில் கிடைக்கும்.

344.இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து .

இயல்பாக நற்குணம் பெற்றவர் தவம் செய்ய இல்லாமை, உடைய பொருள் , மயக்க ஆசைகள் இருக்காது. வேறு நிலை மாறச் செய்தால் தவத்தில் இருந்து பிரித்து விடும்

345.மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை .

வேறு நட்பு கேடு யாதும் கொள்ளாமல் துறவுகொண்டவர் பிறப்பு அற்று உடையவர்க்கு உடம்பும் துன்பமாகத் தெரியும்.

346.யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் .

நான், இது எனது என்ற அகந்தையை விட்டவன் ,விண்ணவர் மேல்நிலை உயர்வு நிகழும்.

347.பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு .

ஆசைகளை விரும்புவர்க்கு துன்பங்கள் இறுகப் பற்றிக் கொள்ளும். ஆசைகள் விடாதவரை .

348.தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

பிறவா சிறப்பு உடையவர் எல்லா ஆசைகளையும் கடந்து பற்று அற்றவர். உலக மயக்கத்தில் இருப்பவர்கள் பிறவிப் பற்றில் அகப்பட்டவர்கள் .

349.பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும் .

ஆசைகள் அற்ற கண்ணோட்டமே பிறவித் துன்பத்தை அகற்றும். உறுதி இல்லாமல் சிறிது ஆசைப்பட்டாலும் பிறவித் துன்பம் வரும்.

  • பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு .

விரும்பி ஆசை அற்றவனான இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டும் .அப்பற்றைப் பற்றி அன்பு செலுத்தினால் ஆசை அகன்று விடும் .

Share.

Leave A Reply