41. கல்லாமை

401 அரங்கின்றி  வட்டாடி  யற்றே  நிரம்பிய

நூலின்றிக் கொட்டி கொளல் .

அரங்கம் இல்லாமல் வெளியில் திரண்ட   பொருள் வைத்து சூதாடுவது போன்றது , அறிவுநூல் கற்காமல் துன்பம் தரும் பேச்சுக்கள் கேட்பது கோட்பாடு  தராது .

402.கல்லாதான்  சொற்கா  முறுதல்  முலையிரண்டும்

இல்லாதாள்  பெண்காமுற்  றற்று

கல்வி கற்காதவன் கற்றவர் பேசும்போது தாமும் பேச எண்ணுவது திருமால் பெண் வேடத்தில் வந்தபோது அசுரர்கள் ஆசைப்பட்டதற்கு  ஒப்பானது .

403.கல்லா  தவரும்  நனி நல்லர்  கற்றார்முன்

சொல்லா  திருக்கப்  பெறின்

கல்வி கற்காதவர் மிக நல்ல வராக , கற்றவர் முன் பேசாது நாவடக்கி இருந்தால் பெருமை சேர்க்கும் .

404.கல்லாதான்  ஒட்பம்  கழியநன்  றாயினும் 

 கொள்ளார்   அறிவுடை  யார் .

படிக்காதவர் அறிவு வெளிப்படுத்துவது  நன்றாக இருந்தாலும் மனம் பெறாதவர் போதனையை ஏற்கமாட்டார் .

405.கல்லா  ஒருவன்  தகைமை  தலைப்பெய்து

சொல்லாடச்  சோர்வு  படும் .

படிக்காத ஒருவர் தகுதி மேம்பட்ட ஒருவருடன் சேர்ந்து பேசுதல்  மனச் சோர்வை ஏற்படுத்தும் .

406.உளரென்னும்   மாத்திரையர்  அல்லார்  பயவாக்

களரனையர்   கல்லா தவர்

மனம் மேன்மை அடைய மாத்திரை அளவு கூட கல்லாதவர் பலன் தராத களர்நிலம் போன்றவர் .

407.நுண்மாண்  நுழைபுலம்  இல்லான்  எழில்நலம்

மணமாண்  புனைபாவை  யற்று .

நுட்பமான நுண்ணறிவு இல்லாதவன் வளர்ச்சி இன்ப வாழ்வு, மண்ணால் செய்யப்பட்ட பொம்மை  போன்று நிலை இல்லாதது .

408.நல்லார்கண்  பட்ட வறுமையின்  இன்னாதே

  கல்லார்கண்    பட்ட  திரு .

கற்றறிந்த  பெரியோரிடம் உள்ள வறுமையை விட துன்பமயமானது .கல்வி கற்காதவரிடம் உள்ள  செல்வம் .

409.மேற்பிறந்தா   ராயினும்  கல்லாதார்  கீழ்ப்பிறந்தும்

கற்றார்   அனைத்திலர்  பாடு .

மேன்மையான  குடியில்  பிறந்திருந்தாலும் கல்வி கல்லாதவர் பெருமை அடையமாட்டார்.கீழ்மை குடியில் பிறந்தவர் ஆயினும் கல்வி கற்றவர் எல்லாம் உடையவர் ஆவர்.

410. விலங்கொடு  மக்கள்  அனையர்   இலங்குநூல்

கற்றாரோடு   ஏனை  யவர்.

மிருகங்களுடன்  மனிதரை  ஒப்பிட மாட்டார்கள். கல்வி கற்றவருடன் கல்லாதவரை ஒப்பிடும் போது  அறிவுத் தன்மையை  வைத்து மிருகத்துடன்  ஒப்பிடுவர்

Share.

Leave A Reply