செந்நிற கதிரொளி
சேர்ந்து கூடவே
வெண்நிற பனித்துளிகள்

நுனியிலையில் அமர்ந்திருந்த பச்சை நிற பாதை வழி
பார்த்து நடந்து சென்றேன்

வண்ணம் நிறைந்த மொட்டு எல்லாம் பூவாய் மாறியது விரித்து நிறைந்த பூக்களோ வாசம் பரப்பியது

காதிற்கோ விருந்தளிக்க குயில்கள் கூவியது கண்ணுக்கு விருந்தளிக்க
பல மயில்கள் ஆடியது

விழி எங்கு செல்வதென்று விழித்திருக்க!
அன்னாந்துப் பார்க்க அழைத்துச் சென்றது கிளி

மேகத்தைக் கிழித்துக் கொண்டு உயர்ந்து நின்றது மலை அங்கிருந்து
இறங்கி வந்தது

அருவி கொட்டியது
மீன்கள் நீந்தின
தவளை தாவியது
மான் ஓடியது

மரம் சிலிர்த்தது
அணில் விளையாட
மயில் ஆடியது
இயற்கை சோலையிலே

இன்புற்றிருந்த சமயத்தில் இதுவரை கண்டிராத வெண்ணொளி
ஒன்று பிறந்து

மயக்கும்
இசையோடு மந்திர மனத்தோடு
சிலை ஒன்று உயிர்
பெற்று சிலிர்த்து வந்தது

வெண்ணிற தாமரையில் ஏடுகள் கையில் ஏந்தி வீணையின் இசை மீட்டி மந்திரப் புன்னகையோடு காட்சி தந்த கலைவாணியைக் கண்டதுமே நான் உறைந்து கற்சிலையாய் மாறிவிட்டேன்.

சொல்லில்லா அழகுடனே செவ்வாயின் இதழ் திறந்து சுந்தரத் தமிழினிலே என்னோடு பேசினாள்

உயிர் உள்ள உணர்வு கூட இல்லாமல் உறைந்திருந்தேன் உண்மைதானே என்ற உணர்ச்சியிலே நான்
ஊமையானேன்.

தவம் செய்த புண்ணியமே இந்த உயிர் செய்த
பாக்கியமே

திகைப்பில் திடுக்கிட்டு உணர்ச்சி பெருக்கோடு
தாயே என்று பணிந்தேன்

எதிர் வந்த என் தாயோ!
தமிழ் மொழியில்
பணி செய் என்று
கட்டளை இட்டு
கண் மறைந்தாள்

எத்தனை புண்ணியம்
எனக்குக் கிட்டியது
என்னையும் பொருட்டென்று எதிர் வந்து உரிமையோடு கட்டளை இட்டுச் சென்ற அன்னையே உன் பாதம் எந்நாளும் பணிந்து நான்
என் சேவை இது
வென்று ஏற்று செயல்படுவேன்.

Share.

Leave A Reply