எல்லாம் மாறும்
ஏற்றம் வரும்
எதையும் எண்ணி
நின்று விடாதே !


உருவம் மாறும்
உணர்வு மாறும்
உச்சி சென்று
லட்சியம் வெல்ல!

முயற்சி செய்து
முன்னேறி வா!
பாதை மாறும்
பருவம் மாறும்.

யாரும் வந்து
எதனை தடுத்தாலும்
நீ போக
வேண்டிய பாதைக்கு…
நீ சென்றே தான்
தீர வேண்டும்.

எதைப் பற்றிய
பயமும் இன்றி
வெற்றியடைய
விரைந்து வா!

Share.

Leave A Reply