மழை என் உயிர் நண்பன்
ஆம்… !

மழை என் உயிர் நண்பன் எனக்கு சகுனம் பார்க்கும் பழக்கம் கிடையாது!

ஆனாலும், நான் செய்யத் துவங்கி மழையால் அது பாதித்தாலும் அதை நான் நல்ல சகுனமாகத்தான் கருதுவேன்.

எப்படிப்பட்ட நாளாக இருந்தாலும்!
சரி அன்று மழை வந்தால் அதுதான் எனக்கு
நல்ல சகுனம்.

மழைக்காலங்களில் தான் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்
இல்லை…!
மழைக் காலத்தை நினைத்தே நான்….!
எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.

நான் நேற்று பிறந்த சிறுவன் என்றாலும் என்னைவிட எவ்வளவோ உயர்ந்த
என் உயிர் நண்பன்
என்னை தனித்துப்
பார்த்ததே இல்லை.

அவன் வரும்போது எனக்கு தாகம் கூட எடுப்பது இல்லை அவனுக்கு ஊர் முழக்க எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும்…!

அவன் ஒவ்வொரு முறை
வரும் போதும்
என் வீட்டு வாசலிலும் வந்து என்னை நலம் விசாரித்துத்தான் செல்வான்.

நான் அவனிடம் என்னைப் பற்றி எத்தனை பெரிய
ரகசியம் சொன்னாலும்
அழுது புலம்பினாலும் கூட அதை அவன் யாரிடமும் சொல்வதில்லை.

எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை மட்டும் தருகிறான்.

என்றும் குளிர்ச்சியாகவே இருக்கிறான்.

பாரபட்சம் பாரதவன் பள்ளங்களை நிரப்பத் தெரிந்தவன்.

எதையும் எதிர்பாராதவன் எல்லோருக்கும் பயன்படுவான்.

அவன் சாக்கடையிலும் விழுவான்.
சமுத்திரத்திலும் முத்தாய் பிறப்பான்.

உயிர் சாத்தாகவும் இருப்பான் கோபம் கொள்ளத் தெரியாதவன்.

சிறிதாய், பெரிதாய், தென்றல் காற்றாய்,இனிமையாய்,
இயற்கையாய், குளிர்ச்சியாய், மகிழ்ச்சியாய், தூய்மையான ஈரத்தோடு என் உயிரில் கலந்திட்ட அவன் என்றும்
என் உயிர் நண்பன்.

மழையில் நனைய
நான் என்றும்
தயங்கியது இல்லை
நனையா விட்டால்
கொஞ்சம் வருத்தப்படுவேன் என் நண்பனின் அன்பில் இன்று நனைய…
வில்லை என்று!

Share.

Leave A Reply