உறைந்து போய் நிற்கிறேன் உருகி ஓட வேண்டும்.

துவண்டு போய் கிடக்கிறேன் துள்ளிப் பாய வேண்டும்.

சிதைந்து போய் விடாமல் சிற்பம் ஆக வேண்டும்.

மறைந்து போய் விடாமல் மண்ணில் நிலைக்க வேண்டும்

என்னை யாரும் தடுக்கவில்லை
என்னை யாரும் இழக்கவில்லை

என் வெற்றி பயணம் தொடங்கி விட்டது.

நான் ஒற்றைப் புள்ளியைச் சுற்றி சுற்றி வட்டமிட்டு
வலை பின்னிக் குறுகினேன்.

உடைந்து எறித்துவிட்டு உலகத்திற்கே வழிகாட்டி நடப்பேன் என்று
யாரோ சொல்லக் கேட்டேன்.

அண்ணாந்து பார்த்தேன் சிகரத்தின் உச்சிகள்
எனக்குத் தெரியவில்லை

தெரியாமல் போனதாலேயே பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஆசை பிறந்தது.

அதற்கான வழித் தடங்களை நோக்கியே மனம் ஓடியது.

மனம் ஒரு மெய் சொன்னது அது தூரத்தில் இருப்பதாக அதன் பாதை கடினம் என்று அதற்குத் தடைகள் அதிகம் என்று
மனம் கேள்வி கேட்டது
உனக்கு அது அவசியமா? என்று…

உன்னால் அது முடியுமா? என்று முயலத்தான் போகிறாயா? என்று

முயன்றால் என்ன? என்று மனம் ஒரு முடிவெடுத்தது
உன்னால் அது முடியாது என்று உனக்கு அது தேவை இல்லை என்றது.

நான் சோர்ந்து விட்டேன்
நான் சுற்றுக் கொண்டே இருந்த
புள்ளி கூட தூரம் சென்று விட்டதை உணர்ந்தேன் துவண்டு விழுந்தேன்.

மனம் ஒரு பொய் சொன்னது
நீ சிகரத்தை நெருங்கி விட்டாய் என்று
இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருக்கிறது எழுந்து ஓடு என்றது.

எழுந்து பார்த்தேன்
சிகரங்கள் அருகில் தான் தோன்றின

பாதையின் வழி கடினமாகத்தான் இருந்தது ஓடத் துவங்கினேன் நம்பிக்கையோடு
ஓடத் துவங்கினேன்.

வேர்த்தது
தடைகள் வந்தது
விழி பிதுங்கியது
உடல் இளைத்தது எத்தனையோ இடையூறுகள்.

என் நம்பிக்கையின்
வேகமும் ஓட்டத்தின்
வேகமும் மட்டும் குறையவில்லை.

ஏதோ ஒரு இடத்தில் என்னையே அறியாமல்
ஓய்வு கிடைத்தது
குளிர்ந்த காற்று
வீசியது

நிதானமாய்
எழுந்து பார்க்கையில்
மனம் சொன்னது
உன் காலடியில் தான் சிகரங்கள் இருக்கிறது என்று.

Share.

Leave A Reply