மனம் எதைப் பற்றி இருக்கிறதோ!
குணம் அதைப் பற்றியே சுழலுகிறது!
தேவைகள் அங்கேயே நிறைகிறது!
தேடல்கள் அங்கேயே
முடிகிறது.

பார்வை அதையே
ரசிக்கிறது !
கேட்பவைகளில் அதையே சுவைக்கிறது!
சிந்தனை அதில் நனைந்தே எழுகிறது!
செயல்கள் அதன் வழியே நடக்கிறது.

எதுவாக நீ ஆசைப்
படுகிறாய்!
அதுவாகவே நீ மாறி விடுகிறாய்!
அது மட்டும் எதுவென்று
நீயே பூர்த்தி செய்!
அது மட்டும் வாழ்க்கையில் சரியாய் பூர்த்தி செய்.

Share.

Leave A Reply