உயர்ந்த எண்ணங்களோடு மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு காத்திரு!

வெண்மனத் தூய்மையோடு வேர்வை சிந்தும் தோளோடு காத்திரு!

நேர்பட்ட பார்வையோடு
மார் தட்டும் உறுதியோடு காத்திரு!

தலைநிமிர்ந்த உணர்ச்சியோடு
கொடுக்க துடிக்கும் கரங்களோடு காத்திரு !

நடக்கத் துடிக்கும் கால்களோடு தீமை எரிக்கும் விழிகளோடு காத்திரு!

எதிர்ப்பை தாங்கும் மார்போடு துரோகம் மிதிக்கும் வேகத்தோடு
காத்திரு!

சரியான நேரத்தோடு
சமயம் பார்த்து வீரத்தோடு காத்திரு!

உறுதியான உண்மையோடு உண்மையான நம்பிக்கையோடு
காத்திரு!

தசை இருகும் உழைப்போடு தளர்வடைய மனத்தோடு காத்திரு!

துடிக்கின்ற இதயத்தோடு முகம் மலர்ந்து
காத்திரு!

நாளை கண்டிப்பாய்
விடியும் என
நம்பிக்கையுடன் காத்திரு.

Share.

Leave A Reply