எப்போதும் வாழ்க்கை
ஒன்று போல் இருப்பதில்லை எப்போதும் வாழ்க்கை
ஒரே பக்கம் சுற்றுவதில்லை எல்லா நாளும் வானம் பௌர்ணமியாய் இருப்பதில்லை

எப்போதும் நிலா முழுமையாய் இருந்தாலும் பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் ஆனா பயணம் என்றும் முடிவதில்லை.

நாம் என்றும் முழுமையடைவது இல்லை என்றாலும் எப்போதும் பௌர்ணமியாகவே நின்றுவிட ஆசைப்படுகிறோம்.

நிலா
வளரும் நாட்களிலும்
தேயும் நாட்களிலும்
மாற்றம் இல்லை

ஆனால்,எப்போதும்
நாம் அப்படி
இருப்பது இல்லை

வளர்பிறை நாள் கூட
நமக்குத் தேவை
இல்லை

பௌர்ணமியாய் மின்னுவது மட்டும்தான் நமது எண்ணம் வளர்பிறை நாட்களில்
வாழ்ந்து வந்தவனுக்குத் தேய்பிறை நாட்களின்
தேவை இருக்காது

வளர்பிறை நாட்களில் வாழ்வைத் தொலைத்து விட்டு தேய்பிறை நாட்களில்
தேடி அலைவது வீண்

வளர்பிறை நாட்களின்
சுகம் அறியாதவன்
தேய்பிறை நாட்களின்
வலி அறிய வேண்டும்

வளர்பிறை நாட்களை
ரசித்து அறியாதவன் தேய்பிறை நாட்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்

வளர்பிறை நாட்களைப்
பயன் படுத்தாதவன் தேய்பிறை நாட்களில்
ஓய்வு எடுக்கக்கூட முடியாது.

வளர்பிறை நாட்களோ தேய்பிறை நாட்களோ
எதுவும் உன்
விதிப்பயன் அல்ல

எல்லாம் உன்
மதிப்பயன் தான்
உன் வளர்பிறை நாட்களை
நீ உணர்ந்து கொண்டால் தேவைப்படாது உனக்கு தேய்பிறை நாட்கள்.

Share.

Leave A Reply