விதைத்தால் தான் முளைப்பும், அறுவடையும்
புகைக்குள்ளே தான் நெருப்பும், சாம்பலும்
புதருக்குள்ளே தான் பாதையும், பயணமும்
பாறைக்குள்ளே தான் சிற்பமும், சிலையும்

கவிஞனுக்குள்ளே தான் சாகசமும், சாதனையும்
முயற்சிக்குள்ளே தான் முதிர்ச்சியும் ,முன்னேற்றமும்
ஊக்கத்திற்குள்ளே தான் செயலும், பயிற்சியும்
செயலுக்குள்ளே தான் வளர்ச்சியும், தொடர்ச்சியும்

உழைப்புக்குள்ளே தான் உயர்வும் ,வாழ்வும்
தன்னம்பிக்கைக்குள்ளே தான் வைராக்கியமும், வெற்றியும்
வெற்றிக்குள்ளே தான் மகிழ்ச்சியும் திருப்தியும்
எண்ணங்களுக்குள்ளே தான் வெற்றி…..

Share.

Leave A Reply