எது நடக்கக் கூடாதோ!
அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க வேண்டுமோ அது நடப்பதே கிடையாது.

எதைத் தேடிச் சென்றேனே! அது கிடைக்கவே இல்லை.

எது கிடைக்கவில்லையோ! அதை மறக்க முடியவில்லை.

எதை மறக்கிறேனோ !
அதுவே எனக்கு கிடைக்கிறது.

எது கிடைக்கிறதோ! அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எதை ஏற்க முடியவில்லையோ! அதுவே பழகி விடுகிறது.

எது பழகிவிடுகிறதோ!
அதுவே ஞாபகத்தில் இருக்கிறது.

எது ஞாபகத்தில் இருக்கிறதோ! அதுவே அனைத்தும் தருகிறது.

எதை தேடிச் சென்றேனோ! அதைவிட எது கிடைத்ததோ! அதுவே சிறந்தது.

Share.

Leave A Reply