என்று துவங்கியது
என்று முடிந்துவிடப்
போகிறது.

நேற்று அரிதெனத் தோன்றியது
இன்று பெரிதெனத் தோன்றியது
நாளை மறந்தே போகக்கூடும்.

அதுவரை அந்த ஆசை இருந்தது
இதுவரை இந்த ஆசை இருக்கிறது
எதுவரை எந்த ஆசை தொடரப் போகிறது.

மனதின் மகிழ்சிக்காகத்தான் இத்தனை ஓட்டமும்
இத்தனை சிரமப்பட்டு
என்ன இருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு
சிரிப்புத்தான் வருகிறது.

மனதை மகிழ்விக்க
இத்தனை சிரமமா?

மகிழ்ச்சியின் அளவெல்லாம் மனதைப் பொருத்ததே!

இன்று நீ இந்த ஆடை
உடுத்த வேண்டும் என்று எண்ணிவிட்டால் வேறு
எந்த ஆடையும் உன்னை மகிழ்விக்காது.

இன்று நீ விரதம் இருப்பதாய் உறுதி கொண்டு விட்டால் எத்தனை பெரிய விருந்தும் உன்னை மயக்கி விடப் போவது இல்லை.

உண்மை இதுதான் மகிழ்ச்சியின் அளவுகோள் மனதைப் பொருத்ததே!

மனதை எளிமைப் படுத்து எல்லா வற்றையும் சமப்படுத்து சாதாரணமாகப் பார்.

சிரித்துக் கொண்டே இரு
மன மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
என்று மட்டும் அதற்கு
கட்டளை இட்டு விடு.

மற்றதை எல்லாம்
தானாய் மாறிவிடும்
மனதை அறிவுக்குள்
அடக்கு.

ஆசையை எளிமைகுள்
நிரப்பு
எளிமையாய் மாறு இயற்கையை நாடு
மகிழ்ந்தே இரு.

Share.

Leave A Reply