முடிந்த பின் விதி என்று பெருமூச்சு விடுபவர்கள்
தான் இங்கு உண்டு.

துவங்கும் முன்னே விதியை எண்ணி மார் உயர்த்தி நடப்பவர் யார்?
முடிந்த பின் தொலைந்துவிட்ட கனவை எண்ணி பெருமூச்சு விடுபவரே!

துவங்கும் முன்னே கனவு கண்டு சரியாய் பாதை அமைக்கவில்லையா?
முடிந்த பின் ஏன்? இத்தனை விமர்சனம்.

துவங்கும் போது என்ன செய்து கொண்டு இருந்தாய்? துவக்கங்கள் தான்
முடிவுகளைத் தீர்மானிக்கும்.

ஏன் முடிந்த பிறகு துவங்கியதைப்
பற்றி சிந்தித்து
கொண்டு இருக்கிறாய்? துவங்கும் போது எதைப்பற்றியும் யோசிக்காத நீ முடிந்த பிறகு தான் எல்லாவற்றையும் செய்கிறாய்.

விடிந்த பிறகு தான் போனதைப் பற்றி யோசிக்கிறாய்!
படிப்பு முடிந்தது பிறகுதான் வேலையைப் பற்றி சிந்திக்கிறாய்!

ஓய்வூதியம் வரும்போதுதான் வங்கி கணக்கை பார்க்கிறாய்! வாழ்ந்து முடிந்த பின்பு தான் பகவத் கீதை கூட படிக்கிறாய்.

எல்லாம் முடிந்த பின்பு தான் செய்கிறாய்!
இதெல்லாம் துவங்கும் முன்னே யோசிக்க வேண்டியவை..
என்ன சிரிக்கிறாய்?

எல்லோரும் செய்வதால் நீ செய்வதும் சரி என்றா?
நான் சிரிக்கிறேன்.

முடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதே உனக்குத் தெரியாது என்று…
அதை தெரிந்து கொள்ள முதலில் எல்லாவற்றையும் சரியாய் துவங்கு.

Share.

Leave A Reply