கருமுகிற் கொழுந்து எழில் காட்டும் சோதிராமன்
ஆர்உயிர் நின்றுஊ சலாடியது தந்தைக்கு
கருங்கல் ஓர் வெள்ளிடைக் கண்டார் கண்ட
கல்மிசை காருந்தன் கழல்துகள் கதவஅகலிகை இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்
வரிசிலை அன்னலும் வாட்கன் நங்கை சீதையும் இருளின் எழுகின்ற புகர்முகயா னையின்
உரிவைப் போர்வை போர்த்த உதயம் செய்தான் ராமன்.
தயரதன் புதல்வன் தாமரைக் கண்ணன்
கயல்பெரு கடலுள் வைக்கும் கடவுளே என்பார் ஆயமேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய்
மையரு தவம் எலாம் வாரி மீண்டதே மணமுடிக்க
ஆய வருபயன் மற்றொன்று உண்டோ?
தந்தையும் தாயும் நீரே தலைநின்றன் பணிமின் என்றான்
நாயகன் அவ்வாசம் அனல்குழை தூங்கு
தன்செவியில்
தொடரா மனம் ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் கோசலை.
அஞ்சினன் அஞ்சு அன்னம் மின்இடை அலச ஓடி
குஞ்சரம் அனைய வீரன் தோள்தழுவிக் கொண்டாள் சீதை
வஞ்சனை நெஞ்சுறப் பட்டது பொய் மான்
அரக்கன் அவ்வுரை எடுத்து அரற்றினான் ராமா
பஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டு போய்
சிஞ்சுப வனத்திடைச் சிறை வைத்தான் ராவணன்
குஞ்சித பாதம்பட இன்றுதான் என்புண்ணியம் பூத்தது
சபரி வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மனை வாழி என்றார்.
நல்லன நிமித்தம் பெற்றோம் சுக்ரீவன் நம்பியை பெற்றோம்
சொல்லினால் ஏவல் செய்வான் கல்வியோடு ஞானமும் ஒத்தார்
செல்லும் மாருதி கண்ணுதல் செல்லும் கயிலையம் கிரியும் ஒத்தார்
கண்ணாடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்
நல்மருந்து போல் நலன்அற உனங்கிய நங்கை
தேடினேன் கண்டனென் தேவியே! அண்டர் நாயகன் தூதன்யான்
சொல்லினால் சுடுவேன் வில்லின் ஆற்றற்கு மாசு என்ற மாருதி
கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் என்றான் சொல்லிற் செல்வன்.