தாகம் தீர வாவென்று அழைத்தோம் 
உயிரை போக்கிட உருவெடுத்து வருகிறாயே 
தமிழகத்தில் உள்ள நதிகள் எல்லாம் 
நிறைந்து இருக்கலாம்  ஆனால் நீ ….
பறித்த உயிர்களுக்கு பதில் 
யார் சொல்வது ?
தட்டு தடுமாறி முளைத்த பயிர்கள் 
எல்லாம் மூழ்கடித்து 
வீனடித்தாயே ஏன்?
யாருக்கு யார் மீது கோபம் 
தண்ணீரே 
உனக்கு என்ன தாகம் ?
நீ வராத வேளையில் 
உன் இடத்தில் வீடமைத்த 
பாவமோ ……….
நீ செல்லுகிற பாதையை 
மறைத்து விட்ட கோபமோ …
நீ வராமல் இருந்தது உன்குற்றம் 
நீ இல்லாமல் உயிர் இல்லை 
என்றிருந்தோம் …
இன்று நீ வந்தாலும் உயிர் 
இல்லை என்றால் எப்படி ?
கடன் வாங்கி கட்டிய வீட்டில் 
ஜலசமாதி ஆனவர்களை 
இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம் 
கரைகள் தாண்டி வந்த மழைக்கு
கண்டனம் தெரிவிக்கிறோம் !!
அனேகமாக ஓடுகிற அத்தனை 
கனரக வாகனங்களின் பின்னாலும் 
எழுதப்பட்டு இருப்பது தான் 
"மழை  நீரை சேமிப்போம் "என்று 
வெறும் வாசகங்களாய் இன்னும் 
எத்தனை காலம் இருக்கப்போகிறதோ 
மழையே இங்கு யாரையும் 
குறை கூறி பயனில்லை 
உன்னை திட்டித் திட்டித் தான் 
ஆறுதல் அடைந்து கொள்ளுகிறோம் 
நம்மை சுற்றி நடப்பவைகளுக்கு 
நாம் தான் காரணம் 
நாங்கள் மாறப்போவதில்லை 
நீ மாறி விடு மழையே நீ !! மாறிவிடு 
தண்ணீர் வேண்டும்!! கண்ணீர் வேண்டாம் !!
Share.

Leave A Reply