அறிந்து கொள்ள ஆயிரம் உண்டு
தெரிந்து கொண்டவரைப் போதும் என்றால்
நீ அங்கேயே நின்று கொண்டு இருப்பாய்

எதைத்தேடி எங்கு அலைந்தாலும்
எடுத்துக் கொள்ள ஏராளமாய் உண்டு
புதைந்திருக்கும் மண்ணில் இருந்து

இல்லாத வானம் தாண்டி எல்லாமும் ஏதோ ஒன்றை
தந்து கொண்டுதான் இருக்கிறது

கொடுப்பது கடவுள் தான் பெறுபவன் மனிதன் தான் மனிதனாய் இருந்து நீ எவ்வளவும்
பெற்றுக் கொள்ளலாம்
கட்டி ஆளலாம்

எடுத்துச் செல்வதற்கு இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது
ஆனால் நீ
கடவுளாய் மாறி கொடுத்துச் செல்வதற்கு உன் உடல் உறுப்புகள் உள்ளன.

மனிதனாய் இறந்து விடாதே கடவுளாய் வாழ்ந்திடு.

Share.

Leave A Reply