எப்படி நான் இடிந்துவிட முடியும் முழுமையாய் மூழ்கிய பின் ஒதுங்கி விட முடியுமா?
மொழிக்கு இனிமையாய் உணர்விற்கு உணர்ச்சியாய் இன்பமழையில் நனையாதிருக்க விதிவிலக்கா இசையே
செவி போதுமென்று உரைத்ததே இல்லை
இசை இல்லாத இடம் உண்டென்றால்
அங்கு உயிர்கள் இருக்காது
நீ இல்லாத இடத்தில் கடவுளும் இருக்காது
அமைதி தவழும் அற்புத இடங்களில்
நீயே நிறைந்து இருக்கிறாய் இசையே!
எது உச்சம் எது மிச்சம்
எது குற்றம் எது மோட்சம்
நதிகளில் சுருதி அருவிகளில் லயம்
குயில்களின் சுரம் அலைகளின் ஆலாபனை
நொடிகளின் சங்கதி மனிதனின் நிரவள் உயிர்களின் தானம் இறைவனின் கற்பனை
எறும்புகளின் ஸரளியும் காதலின் ஜண்டையும் மலைகளில் உச்சஸ்தாய் பாதாளத்தின் மந்திரஸ்தாய்
கோலங்களின் தாட்டு விடியலின் அலங்காரம் குழந்தையின் கீதம் இளமையின் வர்ணம்
உலகத்து கிருதி உயர்களின் கீர்த்தனை
உளமார உணர்ந்தபின் எண்ணி எண்ணி
மனதார மகிழ்கிறேன்
இசையின்றி அசைவில்லை
இசைவிற்குக் காரணம் இறையின்றி வேறில்லை அருள் ஒளியை இசையினில் காண்கிறேன்
பறவையின் பாடலில் பசுவின் பாசையில்
இசையாய் எங்கும் நிறைந்து நீ இணைபிரியா நண்பனாய் என்றும் உன்னுடன்.