யாரோ சொன்ன வார்த்தைகள் ஏன் வாக்குவாதம் ஆக்கிக் கொண்டாய்!
யாரோ செய்த வாக்குவாதத்தை
ஏன் விமர்சனம் ஆக்கிக் கொண்டாய்!
யாரோ சொன்ன விமர்சனத்தை
ஏன் முடிவுரையாக ஏற்றுக் கொண்டாய்?

பேசுகிறவர்களின் வார்த்தைகளை எல்லாம் கேட்டு உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டே இருக்காதே!

நீ இப்படித்தான் என்று கூறியதை எல்லாம் கேட்டுவிட்டு
உன் குணத்தை அப்படியே வைத்துக் கொண்டு விடாதே!

உன்னை உயர்த்துகின்ற உன்னத சிந்தனைகளை உனதாக்கி கொண்டே
உன் எண்ணங்களை
உயர்த்து

உன் மனம் ஒன்றும் செய்து முடித்துவிட்ட சிற்பம் அல்ல செதுக்கப்பட்டு கொண்டு இருக்கும் சிற்பம் தான் என்பதை உணர்ந்து கொள்.

சிறந்த ஒழுக்கங்களை
உன் குணங்களாய்
சீர் படுத்திக் கொண்டே இரு.

நம்பி விடாதே!
ஒரு எல்லைக்குள்
நிறுத்தி விடாதே?
உன் பயணத்தை
என்றும் முடித்து விடாதே!

அவர்கள் எதையாவது கூறிக்கொண்டே தான் இருப்பார்கள் நீ
எதையும் பொருட்படுத்தாது மேலே ஏறிக்கொண்டே இரு.

Share.

Leave A Reply