(பதினேழாம் திங்களில் நிகழ்வது சிறுவர், சிறுவீடு கட்டி விளையாடுகின்ற போது அதனை சிறுவர்தம் காலால் சிதைத்துக் கெடுதலைக் கூறுகின்ற பருவம். சிறுமியர் என் வீட்டை அழிக்க வேண்டாம் என வேண்டுவதாகக் கூறுவது)
1-சலசலக்கும் நீரோடை வானுயர்ந்த மரங்கள்
இயற்கை இடமெல்லாம் இறைவன் இருப்பானாம் கலகலப்பாய் சிறுவர்தம் சிறுமியர் விளையாட
குருமண்ணில் நீர்பட்டு கலந்த கலவையில்
ஆலயம், சிறுவீடு கட்ட
மண்குவித்து
சிறுமிகள் சேர்ந்து வடிவமைத்த வீடு
கலகம் செய்யும் சிறுவருடன் சேர்த்து
மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா
2- திருமால் பள்ளி
கொண்டிருக்கும் பாற்கடல் தாலாட்ட ஓயாது உழைக்கும் அலைகடல்
திருவாகிய மால் மருகன் திருச்செந்தூர்
முருகன் வெற்றி கண்ட கடல் மருகி சீதை சிவலிங்கம் பிடித்து
வணங்கி பூஜை செய்த கடல் உருகி தொழுது வணங்கி வழிபடுகிறோம்
மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா
3-தாய் சேய் வளர்ச்சி கண்டு
பூரித்து மகிழ்ந்து உச்சி முகர்வாள்
நோய் வந்தால் தனக்கு வந்ததாக
எண்ணி மருந்து குடித்து நலம்காப்பாள்
காய்ந்த மரம் கல்லடி படுமென
காய்மை வராமல் திருஷ்டி கழிப்பாள்
காய்மை கொண்டு கானக சூழ்ச்சியறிந்த
மணிகண்டா என்சிற்றில் சிதையாதே சிறுவா
4- சரணாகதி ஆரம்பித்த உடனே அருள்பவன்
சாந்தமும் சுகமும் அளிக்கும் இறைவன்
கரம் கூப்பி மனம் உருகினால்
போதும் எளிதாய் அருள்பவன் இறைவன்
வரம் தரும் வள்ளல் அவன்
பாதம் பற்றினால்
கரைசேர்ப்பான் இறைவன் தரம் பார்த்து தகுதி பெற்றோம்
மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா
5-தகுதி உடைய மனிதராய் பிறந்தும்
புரிதல் இல்லாமல் பிறப்பு இறப்பு
மிகுதி பெற்று சுழலில் சிக்கி
மானிடப் பிறப்பில் மறுபடி பிறந்து
பகுதி உடல் ஆண் பெண்ணாய்
பெற்றும் தன்னை அறியாமல் வாழ்ந்து
விகுதி பட்டு தணிந்து உயர்ந்த
மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா
6- வித்தை காட்டி
ஆட்டுவிப்பவன் இறைவன்
ஆடும் பொம்மையாய் ஆடுகிறோம் வாழ்வில்
நத்தை போல் நகர்ந்து சென்றாலும்
பக்தி மார்க்கம் பரமனை அடையும்
சித்தம் தெளிந்த மனம் கொண்டு
நன்மை செய்யப் பிறந்த மணிகண்டா
நித்தம் விளையாட வருகிறோம் உன்னுடன்
மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா
7-ஆமை போல் உறுப்பு அடக்கி
இறை நேசம் கொண்ட எண்ணத்தால்
ஊமை போல் மௌனம் காத்து
உன் பாதம் சரண் அடைந்தோம்
சீமையில் இருந்து காக்கும் நேசா
சிறாரை காத்து கீர்த்தி கொடுப்பாய்
தீமை அகற்றி ஆட்கொள்ள வந்த
மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா
8-ஆசை பயம் கோபம் அற்று
ஆழ்ந்த சிந்தனையில் மேன்மை பெற்று
இசை ஏழ சுரங்கள் பாடி
இனிய இசையில் இறைவனை நாடி
மிசை தந்து நாளும் துதித்து
பாடும் பொருளாய் நீ இருக்க
திசை எட்டும் உன் அருளாகும்
மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா
மனம் ஒரு நிலைப்படுத்தி நல்ல
எண்ணம் சிந்தையில் நிறுத்தி புத்தியில்
தினம் சக்தி கொடுக்கும் மந்திரமோதி
குழப்பம் ஏற்படா சித்தி பெற்று
வனம் போல் நன்மை செய்து
மழை போல் பயன் கருதாது சினம் கொள்ளாது விளையாட வந்த
மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா
10-கடமை செய்வது மனிதகுல மாண்பு
முக்குண மாண்பை அதில் வைத்து
மடமைஅகற்றி தெளிவு தந்து
உலக மாயை அகற்றப் பிறந்தவனே
அடல் வெற்றி கண்ட மணிகண்டா
குதிரை ஏற்றம் வில்வித்தை தெரிந்தவனே
கடல்ஆழத்தில் தெரியாப் பொருளாய் இருப்பவனே மணிகண்டா எம்சிற்றில் சிதையாதே சிறுவா.