மின்னும் ஒளிச் சுடரே
மீனாட்சி சுந்தரேசர் மகனே குன்றக் குடியில் குடிகொண்ட
சிறுகுன்றில் வாழும் முருகனே
என்னை ஆளும் இறைவனே
ஏதும் அறியா சிறுமினான் கன்று போல துள்ளியே
காண வரும் கன்றுனான்

பால் கொடுக்கும் பசு
பாரா பட்சம் பார்க்காது மால் மருமகனே நீயும்
பரந்த மனம் கொண்டு சால் பணிந்தவர்க்கு எல்லாம்
சக்தி கொடுக்கும் முருகா வேல் பிடித்த கரத்தால்
எம்மையும் காத் தருள்வாய்

அன்பு கொண்ட முருகா
ஆணை இட்டுச் சொன்னாய்
துன்பம் உனக்கு இல்லை
துணை நான் என்று இன்பம் கண்டு கொண்டேன்
இனிக்கும் வாழ்வை
நீயென்று
பின்பு என்ன பயம்
பாதம் பணிந்தேன் பக்குவமாய்.

Share.

Leave A Reply