மார்கழி மாதம் ஆறாம் நாள்
பிரம்மா
வகுப்பிலே வர்ணமில்லை கலப்பில்லை பிரம்மா
வாக்குத்தந்து வரம் தருபவனே பிரம்மா பகுத்தறிந்து பக்குவமாய் படைப்பவனே பிரம்மா
பல்லாண்டு வாழ வாழ்த்துவாய் பிரம்மா தகுதிதந்து தடைகள் நீங்கி உயர
தவம் செய்து வணங்குகிறோம் பிரம்மா வகுத்து வடிவமைத்து படைப்பவனே பிரம்மா
வஞ்சமில்லா குழந்தைகள் வணங்குகிறோம் அருள்வாய்
விஷ்ணு
மாடு மேய்க்கும் ஆயர்பாடி கண்ணா மாட்டுப் பாலைக் குடித்தவனே கண்ணா வாடும் மக்கள் குறை கேட்பாய்
வறுமை போக வழியும் சொல்வாய்
காடு மலை தேடி அலைந்து
தெய்வம் உன்னைக் காணாது வருந்திப் பாடும் குரல் கேட்டு வருவாய்
பக்கத் துணையாய் இருக்க வருவாய்
சிவன்
உடம்பில் விபூதிபூசி கழுத்தில் மண்டை ஓடும்
உடம்பைச் சுற்றி பாம்பும் படமெடுக்க இடப்புறத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து
இடிபடாமல் வலப்புறத்தின் தலையில் கங்கைதாங்கி
அடங்கல் முறை ஓத கேட்பவனே
அடியவர்க்கு அருளும் சோதி வடிவே
மடத்தில் தங்கும் முனிவர்க்கு அருள்பவனே
மடந்தை எங்களுக்கும் அருள்வாய் சிவனே