மாதம் 28ஆம் நாள்

பிரம்மா

பிரம்ம முகூர்த்தத்தில் கற்பது எளிது
காலை காற்று உடலுக்கு நல்லது
சிரமம் பாராது எழுந்து கற்றால்
சிகரம் தொடை பயிற்சி ஆகும்
கரம் கூப்பி மனதில் தியானித்து
பிரம்மனை தினம் காலையில் வணங்க
கரம் கூப்பி மனதில் தியானிக்க
கருணை செய்வாய் ஒருநிலைப் படுத்த

விஷ்ணு

உரிப்பானை உடைத்து வெண்ணை உண்டாய்
உளம் மகிழ்ந்து ஓடி மறைந்தாய்
கரிசனம் கொண்ட அம்மா முன்பு
கண்கட்டி வித்தை செய்த கண்ணா
தரிசனம் தருவாய் ஒரு முறை
தவப் பயனாய்
கண்குளிர காண பரிபாவம் போக்கும் கண்ணா உன்
பரிவால் வாழ வரம் தருவாய்

சிவன்

திரிசூலம் உன் கரம் வாசம்
திரிசடை உன் தலை கவசம்
நரி பரி ஆக்கிய சிவனே
நாடு நலம்பெற வரம் தருவாய்
சரி பாதி உடல் தந்து சிவசக்தி ஆன சிவனே சர்வேசா
திரி சொர்க்கம் ஆன சிவனே
திருவடி வணங்குகிறோம் திண்மை தருவாய்.

Share.

Leave A Reply