மார்கழி மாதம் 20ஆம் நாள்
பிரம்மா
பட்டை அடித்த விபூதி குங்குமம்
பண்பை வளர்க்கும் பக்தி மார்க்கம்
சட்டை செய்யாது இருப்பவர் என்றாலும்
பக்குவப் பட வைப்பவன் பிரம்மா கட்டையான அகத்திய குருமுனி சித்த
மருத்துவம் ஆரோக்கியம் தரும் அற்புதம்
அட்டை போல இயற்கை ஒன்றி
நலமுடன் வாழ பிரம்மா அருள்வாய்
விஷ்ணு
மாடுகள் திசை மாறிப் போனாலும்
மாதவன் இசை கேட்டுத் திரும்பும்
கோடு போட்டு தடுத்தா கூட
கேட்காமல் விதி வெல்லும் சீதை
நாடு விட்டு நாடு போய்
ராம காவியம் வெல்லும் அனுமன்
பாடு பட்டு உன் இதயத்தில்
இடம் தந்தது போல் அருள்வாய்
சிவன்
மாற்றி ஆடிட சொன்ன போது
மதுரையில் மாற்றி காலாடிய சிவனே போற்றி புகழ்ந்து பாடிய போது
பூரித்து நடனம் ஆடிய சிவனே
ஏற்றிய தீபச் சுடரில் எல்லாம்
தெரிபவன் மதுரை நடராசரின் பாதம்
பற்றிய போது
வெள்ளிசபை சிவனே
பாத பூஜை செய்கிறோம் அருள்வாய்