மார்கழி மாதம் 16ஆம் நாள்
பிரம்மா
வெள்ளைத் தாமரையில் அமர்ந்த பிரம்மா
வெண்ணிற உடை அணிந்த பிரம்மா
கொள் வினை செய்யும் பிரம்மா
குலம் வாழ வாழ்த்தும் பிரம்மா
கொள்கை உடன் தவம் செய்தால்
வரம் கொடுத்து நலம் காப்பவனே
கோள் போன்று ஒளி தருபவனே
கொள்கை கொண்டோம் வலிமை தருவாய்
விஷ்ணு
பருவத வனப் பாதுகையை வணங்கி
பாதம் தொழுதால் பரமனருள் கிடைக்கும் தர்ம சிந்தனை நிறைந்த இடத்தில்
தடைகள் அகன்று நலன்கள் கூடும்
ஏர் உழுது விதைத்த விதைகள்
நீர் ஊற்ற வளர்வது போல்
சீர் தூக்கிப் பார்த்து பக்தர்
குறை போக்கும் ராமா காப்பாய்
சிவன்
சோதி தரிசனமே சுயம்பு லிங்கா
சிவன் சேவடி பேரின்ப தரிசனமே
ஆதி அந்தமே அணலின் உருவே
அறியாப் பிள்ளைகள் வணங்கு கின்றோம்
பாதி உடலில் பார்வதி இருக்க
பக்குவப் பட்டு சக்தி பெருக
கதியென உன்தாழ் சரண் அடைய
சங்கரா உமையே உன்னருள் பெருக