மார்கழி மாதம்
பன்னிரெண்டாம் நாள்

பிரம்மா

இராமனிடம் பக்தி கொண்டவன் அனுமன்
இதயத்தில் இடம் பிடித்தவன் அனுமன் பிரம்மா உன்னிடம் பக்தி கொண்டோம்
பிரபுவே படைப்பவனே அருளைத் தருவாய்
உரம் இட்ட செடி வளரும்
உன்னருள் பெற்றால் நாங்கள் வளர்வோம் திரம் கொண்டு உன்னைப் பணிந்தோம்
திருவருள் புரிவாய் பிரம்ம தேவா

விஷ்ணு

நின்ற அமர்ந்த கிடந்த கோலம்
கண்டு மகிழ புவிப் பிறப்பு
கன்னி உமக்கு கிடைத்தது தவப்பயன்
வைகுண்ட ஏகாதேசி விரதம் இருந்து
சன்னி பிடித்தாலும் மாதவனைக் காண
சன்னதி வருவதே எங்கள் பாக்கியம்
உன்னி உலகளந்த வாமனப் பெருமானே உன்பாதம் சரண் அடைந்தோம் காப்பாய்

சிவன்

ஏழு உலகம் ஆள்பவனே சர்வேசா
எழுந்து நடனம் ஆடுபவனே நடராசா
ஏழு வண்ணத்திரை விலக நடனமாடும்
நடன சுந்தரேசா நடராசா உமையே
ஏழு வகை காய்கறி சமைத்து வழிபடுகிறோம்
களி ரொட்டி செய்து படைக்கிறோம்
ஏழு இசைகேட்டு ஏளடி வைத்துவந்து
எங்கள் குறை போக்கி அருள்வாய்.

Share.

Leave A Reply