(குழந்தை ஒன்பதாம் மாதத்தில் நிகழ்வது சப்பாணிப் பருவம் குழந்தை இரு கைகளையும் சேர்த்து தட்டுதல் கால்களை மடக்கி அமர்ந்து கொள்வது)
1-பாற்கடலை கடைந்த போது வந்த
அமிர்தத்தைக் குடிக்க தேவரும் அசுரரும்
சாற்றுதல் செய்த போது மோகினியாய்
வேடமிட்ட திருமால் பெற்ற குழந்தை
தாற்றுதல் பெருமாளுக்கு கைவந்த கலை
ஒன்பது அவதாரம் எடுத்த திருமாலைப்
போற்றி புகழ்ந்து தாலாட்டுப் பாடுகிறேன்
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
2-தொங்கும் கொடி மல்லிகை நறுமணம்
மலர் மாலை துளசி மாலை பாங்குடன் சூட்டி அழகு படுத்த
பக்தர் கண்டு ஆனந்தம் கொள்ள
சங்கு சக்கரம் கரம் தாங்கி
தலை முடியில் கிரீடம் தாங்கி மாங்கன்று தழைக்கும் பிருந்தாவன கண்ணன்
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
3-தேவகியின் மகனாய் சிறையில் பிறந்து
யசோதை மகனாய் ஆயர்பாடியில் வளர்ந்து அவதார கண்ணன் அஞ்சா நெஞ்சன்
மலையைத் தூக்கி இந்திரனை அடக்கினான் அவனி காக்க பூதகியைக் கொண்டான்
காளிங்கனை கம்சனை கொண்டல் வண்ணன்
சுவடு சுகமான சுகராகம் கேட்டு
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
4- ராம நாமத்தை பக்தியுடன் சொன்னால்
பாவம் பறந் தோடுமே நம் சேமம் நிலையாகுமே பிறவி பிணிதீருமே
சாபம் நீங்கி பாவம்
கரைசேருமே
நாமநீர் நாராயணன் அருள் கூடுமே
நாத இசை வசம் ஆகி
தாமம் வாசல் திறந்து
வழிவிடுமென
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
5-தாய் தந்தையர் பணி செய்த
பக்தருக்கு காட்சி தந்த விட்டலா
காய் மனமும் கனியாகி பக்குவப்
படுத்தும் நெறியைத் தரும் விட்டலா
சாய்ந்து ஆடி கை கொட்டும்
பிள்ளைக்கு காட்சி
தரவேண்டும் விட்டல்லா
நோய் வராது காக்கும் கேசவனுக்கு
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
6-காய்நெல் போல் பக்தியில் விளைந்து
மீன் உருவம் எடுத்தவனை காணவேண்டும்
சாய்வு வராமல் பூமியை கொம்பில்
தாங்கிய வராக மூர்த்தியை காணவேண்டும்
தாய் போல் தடைகள் அகற்றி
பக்தனை காத்த நரசிம்மனை காணவேண்டும் காய் கனிந்த பழமான கேசவனுக்கு
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
7-குள்ளமான வாமண உருவம் எடுத்து
மூன்றடி அளந்தவனைப் போற்ற வேண்டும் கள்ளமில்லா பரசுராமன் அறிவு வேண்டும்
ராம அவதார சீதா ராமன் வெள்ளநீரில் இருப்பவனை வணங்க வேண்டும்
விண்மீனாய் தெரிபவனை காண வேண்டும்
தெள்ளியர் வரம் கொடுக்கும் கேசவனுக்கு
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
9-அமுதமும் நஞ்சும் வந்த போது
நஞ்சை உண்டு காப்பாற்றியவன் சிவன் சுமுகம் நீலமுகம் ஆன போது
தொண்டையைப் பிடித்து காத்தாள் பார்வதி
குமுறுதல் கொண்ட அரக்கரிடம் இருந்து
காத்த நீலமேனி
கண்டனின் மகனே
சமூக மக்கள் வணங்கும் மணிகண்டா
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
9-திருவிளையாடல் செய்யும் சிவன் மகனே
திருத்தலம் வணங்கிக் காண வருவார்
ஒழுங்கு சேர்ந்து மாலை போட்டு
ஒழுங்கு நெறி ஏற்று வருவர் கருக்கலில் எழுந்து நீராடி விரதம்
ஏற்று மலை ஏற வருவார் கருணாகர மூர்த்தி ஆன மணிகண்டா
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே!
10-படைத்த பிரம்மன் நான்முகன் மகிழ்ந்தார்
படிப்படியாய் ஏறிவரும் மக்கள் கண்டு
நடைபயணம் ஏற்று வருவது அறிந்து
பாகுபாடு இல்லாத கூட்டம் கண்டு
தடை அகற்றி தகுதி பெற்று
வரும் மக்களை காக்கும் தெய்வமாய்
கடைக் கண் பார்வை கிடைக்க
கைதட்டி சப்பாணி கொட்டு வீரே.