கிருஷ்ணரின் கீதை
கேசவா! பரமாத்மாவிடம் கொண்டு சேர்க்கும் பயிற்சியை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! போக விசயத்தில் வெகு நாள் பழக்கம் என்பதுதான் சாதனைக்கு இடையூறான முக்கிய காரணம்.
வேறு விசயங்களில் மனம் செல்வதை அறிந்த உடனே மிகவும் கவனத்துடன் எதற்கும் இடம் கொடாது உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்.
மனம் பலவாறு நயந்து வணங்கி கேட்டுக் கொண்டாலும் அவற்றிற்கு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது.
மனதிற்குக் கொஞ்சம் இணங்கிவிட்டால் நோயாளிக்கு ஒவ்வாதைக் கொடுத்து விடுவது போலவும், குழந்தைகளின் கையில் கூரான கத்தியைக் கொடுத்து விடுவது போல காரியம் கெட்டுவிடும். எச்சரிக்கைதான் இங்கே பெரிய சாதனை.
கொஞ்சம் எச்சரிக்கை தவறினாலும் சக்தியை இழந்தாலும் அவனுக்கு தியான யோகம் கைகூடாது.
ஆகவே, அவன் உறுதியாக கவனத்துடன் இருக்க வேண்டும். மனதை மீண்டும் மீண்டும் விசயங்களில் இருந்து மீட்டி பகவானிடம் ஈடுபடுத்த வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.
மேலும், மனம் நன்கு அமைதி அடைந்தவனும், பாவங்கள் அற்றவனும், உலகியல் ஈடுபாடு அடங்கியவனும், சத், சித், ஆனந்த மயமான பிரம்மதிலே ஒன்றியவனும் ஆன யோகியை உயரிய பேரானந்தம் வந்தடையும் என்கிறார் கிருஷ்ணன். கேசவா உயரிய சுகம் கிடைக்கிறது என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! தமாகுண, ராஜோ குணங்களைக் கடந்து சுத்த சத்வத்தில் நிலை கொண்ட சாதகன் நித்தியமான விஞ்ஞான மயமான, ஆனந்த மயமான பரமாத்மாவை தியானம் செய்து
இரண்டறக் கலந்த பிறகு அவனுக்கு தியானத்தினால் உண்டாகும் சாத்விக ஆனந்தம் கிடைக்கிறது. அதை இங்கே உத்தம சுகமாகும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சனா! பாவம் அற்ற இத்தகைய யோகி இவ்வாறு எப்பொழுதும் இடைவிடாது ஆத்மாவை பரமாத்மாவிடம் ஈடுபடுத்தி எளிதாக பரபிரம்ம பரமாத்மாவை அடைவது என்னும் முடிவற்ற நிறைவான ஆனந்தத்தை அனுபவிப்பான் என்கிறார் கிருஷ்ணன்
