கேசவா! பிரம்மச்சரிய நெறியைப் பற்றிய கருத்தைக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! பிரம்மச்சாரிகளின் வீரியம் எந்த நேரத்திலும் கீழ்நோக்கி செல்லாது. ஆகவே, அவர்கள் பிரம்மத்தின் மார்க்கத்தில் எளிதாக முன்னேறுகிறார்கள்.

ஆசிரமத்தில் உள்ளவர்கள் அந்த ஆசிரம தர்மமாக விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சாதாரணமாக எந்த நிலையிலும் சக்திக் கேற்றவாறு பிரம்மச்சாரியத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

பிரம்மச்சாரியத்தின் முக்கியமான குறிக்கோள் விந்துக்களை காப்பதும் அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வதும்தான்.

மனம், சொல், உடல் இவற்றில் புணர்ச்சியை அறவே ஒழித்து அதைக் காப்பாற்றுவார்கள். இதுவும், ஒரு வகையில் பிரம்மச்சாரியம் தான்.

ஆசிரமப் பாகுபாட்டின் இலட்சியமே பிரம்மத்தை அடைவது தான் பிரம்மச்சாரியம் தான் எல்லாவற்றிற்கும் முதல் ஆசிரமம். அதில் மிகுந்த அக்கறையுடன் பிரம்மச்சரிய நியமங்களைக் காப்பது அவசியமாகும்.

இதைத்தான் பிரம்மத்தில் இச்சை உள்ளவர்கள் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பார்கள்.  சாதனை புரிபவர்கள் கடைசி நேரத்தில் அதை அடைவார்கள் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! புலன்களின் எல்லா வாயில்களையும்     
அடைக்க வேண்டும். வெளி விசயங்கள் புகாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

மனதையும், இதயத்தில் நிலையாக நிறுத்திப் பின் அவ்வாறு வசப்படுத்தப் பட்ட மனதால் பிராணனை உச்சந் தலையில் நிலைபெறச் செய்ய வேண்டும்.

பரமாத்மா சம்பந்தமான யோக தாரணையில் நிலைத்து நின்று, “ஓம்” என்னும் ஒரே எழுத்தான பிரம்மத்தை உச்சரித்துக் கொண்டு “ஓம்” என்ற நிர்குண பிரம்மமான என்னைச் சிந்தனை செய்து கொண்டு இவ்வுடலை நீத்துச் செல்கிறானோ அந்த மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! ‘இதயம்’ எந்த இடத்தில் உள்ளது அதை நிலை நிறுத்துவது என்பதையும் விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! தொப்புள், தொண்டை இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே உள்ளது இதயம். இதுவே இதயகமலமாகும்.

இங்குதான் மனமும், பிராணன்களும் உள்ளன. இங்கும், அங்கும் திரியும் மனதை சங்கல்ப, விகால்பங்களில் இருந்து விடுவித்து இதயத்தில் தேக்கி வைப்பது தான் இதயத்தில் மனதைத் திடமாக வைப்பது ஆகும்.

Share.

Leave A Reply