கேசவா! “அறியாமையை அடைதல் என்பதை விளக்கங்கள்” என்கிறான் அர்ச்சுனன். துன்பத்தையும், அச்சத்தையும் விளைவிக்கக் கூடியவையும், நொடி நேரத்தில் அழிந்து போகின்றவைகளும் ஆன போகங்களையே சுகத்திற்குக் காரணமாக எண்ணி விடுவதால் அவற்றைச் சேர்ப்பதிலும், புலன் வழி, இன்பங்களை நுகர்வதிலும், தங்களுடைய விலைமதிக்க முடியாத வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்கிறார்கள்.
இதுதான், “அறியாமையை அடைதல் என்பதன் கருத்தாகும்” என்று விளக்குகிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! பயன்கருதாது சிறந்த செயல்களைப் புரிகின்ற மனிதர்களுடைய பாவம் நசிந்து விட்டால்….
சுகம், துக்கமாகிய விரும்பு, வெறுப்புகளில் உண்டான இரட்டைகள் வடிவான மயக்கத்தில் இருந்து விடுபட்டுவிட்ட உறுதியான பக்தன் என்னை எல்லா வகைகளிலும் வழிபடுகிறான் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! என்னை சரணம் அடைந்து மூப்பு, மரணம் இவற்றில் இருந்து விடுபடுவதற்காக முயல்கின்றார்களோ அவர்கள் பிரம்மத்தையும் சம்பூர்ண கர்மத்தையும் அறிந்து கொள்கிறார்கள் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! ஆத்ம சுயரூபமான என்னை மரணத் தருவாயிலும் கூட அறிகிறவர்கள் ஒன்றிய மனதோடு கூடிய அவர்கள் என்னையே அறிகிறார்கள், பின் என்னையே அடைகிறார்கள் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! அதிபூதம், அதிதைவம், அதியஜ்ஞம் என்ற சொற்கள் எந்தெந்தத் தத்துவங்களைக் குறிக்கின்றன என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! அழியும் இயல்புடைய அனைத்து ஜடத் தொகுதிக்கும் “அதிபூதம்” என்ற பெயர்.
இறைவனை நிந்திக்கும் இயல்பு உடையவர்களுக்கு “அதிதைவம்” என்று பெயர்.
எங்கும் நிறைந்துள்ள பகவானுடைய சுய ரூபத்துக்கு “அதியஜ்ஞம்” என்று பெயர் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
ஏழாவது அத்தியாயம் நிறைவுற்றது.
