கேசவா!ஞானிக்கு நான் மிகவும் இனியவன், எனக்கு ஞானி மிகவும் இனியவர் என்று கூறுவதன் கருத்தை விவரி என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! உலகியல் மனிதர்களின் நோக்கில் கிடைக்கவே முடியாதவை என்று மதிக்கப்படுபவனான போகங்களையும், சுகம் பெற வேண்டும் என்கிற எல்லா விருப்பங்களையும் பகவானின் பொருட்டுத் துறந்துள்ளனர், என்பதையும் அவர்களுடைய நோக்கில் பகவானுக்கு எவ்வளவு பெருமை இருக்கிறது என்பதையோ, அவர்களுக்கு பகவான் எவ்வளவு பிரியமானவர் என்பதையோ வேறு யாரும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

எவர் என்னை எவ்விதம் படிபடுகிறார்களோ, அவர்களை அவ்விதமே நானும் அடைகிறேன் என்பது பகவானின் முழக்கம் ஆகும்.

எனவே, அவர்களிடம் மிகவும் அன்பு பாராட்டினால் அதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? அவர்கள் எனக்கு மிகவும் இனியவர்கள் என்கிறார் கிருஷ்ணர்.

அர்த்தார்த்தி, ஆர்த்தன், ஜிக்ஞாஸு, ஞானி இவர்களில் ஞானியே என்னுடைய சுயரூபம். ஏனெனில் என்னிடம் ஒன்றிய மனமும், புத்தியும் கொண்ட ஞானியாகிய பக்தன் மிகவும் உயர்ந்த கதியாகிய என்னிடமே நிலைபெற்று நிற்கிறான்.

கற்புடைய மங்கை தான் எதை விரும்பினாலும் அதை தன் கணவன் தான் பெற்றுத் தர வேண்டும் என்று தானே நினைப்பாள்.

அதற்காக வேறொருவரை அணுகுவதில்லை, நம்புவதில்லை பிறர் இருப்பதை கூட அறிவதில்லை கணவனை மட்டும் வணங்குகிறாள். அது போல….

பக்தர்கள் பகவான் ஒருவரையே நம்புகிறார்கள். பகவானிடம் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையில் அணு அளவு குறையையும் ஏற்படுத்தக் கூடிய எந்த செயலிலும் அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.

நிறையவேறப் பெறாத அவர்களுடைய ஆசைகளை கூட பகவானே நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். என்னுடைய பக்தர்கள் எப்படி வேண்டுமானாலும் என்னை வழிபாடட்டும் இறுதியில் அவர்கள் என்னையே அடைகிறார்கள் என்கிறார் கிருஷ்ணர்.

கேசவா! ஞானியே எனில் என்னுடைய சுயரூபமே! என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! பக்தர்கள் இருப்பதால் நான் இருக்கிறேன். நான் இருப்பதால் பக்தர்கள் இருக்கிறார்கள். அதாவது, ஞானியாக உள்ள பக்தனுக்கும் தனக்கும் இடையே சிறிது கூட வேற்றுமை இல்லை என்கிறார் கிருஷ்ணன்.

பல பிறவிகளுக்குப் பிறகு கடைசி பிறவியில் தத்துவ ஞானம் அடைந்த மனிதன் தன் அனைத்தும் வாசுதேவனே என்று என்னை புகலாக கொள்கிறான். அத்தகைய மாகாத்மா மிகமிக அரிதானவன் என்கிறார்.

கேசவா! கடைசிப் பிறப்பு என்று சொல்வதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! எந்தப் பிறவியில் மனிதன் ஞானியாகி பகவானின் பக்தன் ஆகிறானோ! அதுவே அவனது கடைசி பிறவியாகும்.

ஏனென்றால் இவ்விதம் பகவானேப் பற்றிய உண்மையான அறிவு பெற்ற பிறகு, அவனுக்கு மீண்டும் பிறப்பு கிடையாது. அதுவே, அவனுடைய கடைசி பிறப்பாகும் என்கிறார் கிருஷ்ணன்.

மேலும் கூறுகிறார் “பல பிறவிகள்” என்று
ஓரிடத்திலும் நிபந்ததை இடவில்லை சிரத்தியிலும், பிரியத்திலும் உள்ள குறைவு காரணமாக சாதனை தளர்ந்து போனால் பல பிறவிகள் எடுக்கத்தான் வேண்டி இருக்கும்.

சிரத்தையும், பிரியமும் அதிகமாகி சாதனைகள் தீவிரம் ஏற்பட்டால் ஒரே பிறவியில் பகவானை அடைய முடியும் இதில் கால வரையறை எதுவும் இல்லை என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply