கிருஷ்ணரின் கீதை

கிருஷ்ணா! அவனுடைய முன்வினைப் பாவங்கள் இருக்குமே அவற்றின் பயனாக மரணத்திற்குப் பிறகு தாழ்நிலையை அவன் அடைய மாட்டானா என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! முன்வினைப் பாவங்கள் இருந்தாலும் பகவானை அடைவதற்காக அதாவது தன்னை ஆன்மீகத் துறையில் மேன்மைப்படுத்திக் கொள்வதற்காக கடமைகளை ஆற்றும் சாதகனுக்குத் தாழ்நிலை ஏற்படாது.

எடுத்துக்காட்டாக இப்படி விளக்கலாம். ஒருவன் கடன் வாங்கி விட்டான் திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால், நம்பிக்கை மோசம் செய்பவன் அல்லன்.

அவனிடம் உள்ளதை எல்லாம் கடன் கொடுத்தவர்களுக்கு வழங்கி விட்டான். மேலும், சம்பாதிப்பதையும் இப்படியே நல்ல எண்ணத்துடன் கொடுத்துக் கொண்டிருக்கிறான். அவன் கொடுக்கவே விரும்புகிறான்.

இந்த நிலையில் இரக்கமுள்ள கடன் கொடுத்த எவரும்,அவன் மீது வழக்குத் தொடுப்பதில்லை. அவனுக்கு நல்லெண்ணம் இருக்கும் வரையில் வாய்ப்புக் கொடுக்கிறார்கள்

இந்த மாதிரி பகவானும்  தம்மை அடைய சாதனை புரிபவனின் தூய மனப்பான்மையைக் கண்டு அவனுடைய பாவ வினைகள் மூள்வதை தடுத்து…

அவனுடைய சாதனை முறையில் உள்ள இடையூறுகளை நீக்கி அவனுடைய பந்தங்களில் இருந்து விடும்படி வாய்ப்பு அளிக்கிறார்.

சாதாரண மனிதனே கடனாளிக்குக் கடனை தீர்க்க அவனுக்குத் தவணையைத் தள்ளிக் கொடுக்கும் போது பரம தயாளுவான பகவான் சாதகனுக்கு இப்படி வாய்ப்பு அளிப்பார் என்று சொல்லவும் வேண்டுமா! என்கிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணா! ஆத்ம முன்னேற்றத்திற்காக சாதனை புரிபவர்கள் இறந்த பிறகு தாழ்நிலை அடைய மாட்டார்கள் என்பது முறையெனில் பரத் மகாராஜன் மரணத்தருவாயில் ஒரு மானின் இடத்தில் மனதைச் செலுத்தியதால் மான்பிறவி எடுக்கும்படி ஆயிற்றே இது எப்படி நேர்ந்தது என்பதை விளக்கங்கள் என்கிறான் அர்ஜுனன்.

அர்ச்சனா! பரத் மகாராஜன் சிறந்த சாதகன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரக்கத்தால் மோகத்தின் வசப்பட்டு மான்குட்டியிடம் அவருக்குப் பற்றும், மாம காரம்மும் ஏற்பட்டுவிட்டன.

அதனால், மரணத் தருவாயில் அவருடைய இலட்சியம் தவறிவிட்டது மான்குட்டியின் நினைவே அவரை ஆட்கொண்டு விட்டதால் அவர் மானாகப் பிறக்க நேர்ந்தது.

ஏனெனில் மரணத் தருவாயில் எந்த நினைவு உள்ளதோ அதையே மறுபிறவியில் பெறுவார்கள் என்பது ஒரு வலுவான நியதி

அதன் விளைவாக பரத் மகாராஜனுக்கு மான்பிறவி ஏற்படத்தான் செய்தது. ஆயினும், அது வீழ்ச்சி என கருதுவதற்கில்லை.

ஏனெனில் மான் பிறவியில் கூட அவருக்கு முற்பிறவி பற்றிய நினைவு அகலவில்லை. எனவே, மான் பிறவியில் அவர் மோகம் பற்றுதல் இவற்றைத் துறந்து நல்ல சீரிய சாதகர்களைப் போல மிகுந்த விவேகத்துடன் சருகுகளை உண்டு அடக்கத்துடனும், விவேகத்துடனும் வாழ்ந்து மறுபிறவியிலேயே மானுட பிறவி பெற்று முன் பிறவியின் பயிற்சியின் வலுவால் விரைவாகப் பரமகதியை அடைந்து விட்டார்.

ஆகவே,முன் சொன்ன சித்தாந்தத்தில் எந்தத் தவறும் இல்லை. இந்த சரித்திரத்தல் இருந்து பகவானே அடைவதற்கான இலட்சியத்தை ஒருபொழுதும் கைவிடக்கூடாது என்று பாடம் கற்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply